உள்ளூர் செய்திகள்

எள் சாகுபடியிலும் மதிப்பு கூட்டலாம்

எள்ளில் மதிப்பு கூட்டிய பொருளாக தயாரிப்பு குறித்து, உத்திரமேரூர் அடுத்த, செம்புலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி எஸ்.ராமச் சந்திரன் கூறியதாவது:நெல், கரும்பு, வேர்க்கடலை, எள் ஆகியவை சாகுபடி செய்து வருகிறேன். விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்துவருகிறேன். குறிப்பாக, எள்ளிலும் எண்ணெய்யாக மாற்றி விற்பனை செய்துவருகிறேன்.ஒரு லிட்டர் கடலை எண்ணெய் 200 ரூபாய்க்கும், ௧ லிட்டர் நல்லெண்ணெய், 400 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், மகசூலில் எடுக்கும் வருவாயை காட்டிலும், மதிப்பு கூட்டி தயாரித்து விற்பனை செய்யும் போது கூடுதல் வருவாய்ஈட்டுவதற்கு வழி வகுக்கிறது.வேர்க்கடலை,எள் ஆகிய விளை பொருட்கள் இல்லை என்றாலும், பிற விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து மதிப்பு கூட்டிவிற்பனை செய்துவருகிறேன்.இவ்வாறு அவர்கூறினார்.தொடர்புக்கு: எஸ்.ராமச்சந்திரன்,94446 79813.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !