சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு
சட்டசபை கூட்டத்தொடர் நீட்டிப்பு
கர்நாடக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தொடர், நாளையுடன் முடிய இருந்தது. ஆனால் கவர்னர் உரை மீதான தீர்மானத்தில், இன்னும் நிறைய உறுப்பினர்கள் பேச வேண்டி உள்ளதால், சட்டசபை கூட்டம் பிப்ரவரி 2, 3, 4 என 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. நாளை கூட்டத்தொடர் நடக்காது என்று சட்டசபை அலுவல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, சபாநாயகர் காதர் அறிவித்தார்.