உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மனைவிக்கு சித்ரவதை ஏட்டு மீது வழக்கு பதிவு

மனைவிக்கு சித்ரவதை ஏட்டு மீது வழக்கு பதிவு

மைசூரு: தொடர்ந்து மூன்றுஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்து கொண்ட கர்ப்பிணி மனைவியிடம், விவாகரத்து கேட்டு சித்ரவதை செய்த ஏட்டு மீது, மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகாவின், ராம்புரா கிராமத்தில் வசிப்பவர் கென்டகன்னசாமி, 30. இவர் கோலார் மாவட்ட ஆயுதப்படையில், ஏட்டாக பணியாற்றுகிறார்.இவரும், எதிர் வீட்டில் வசிக்கும் இளம் பெண்ணும், மூன்று ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களின்திருமணத்துக்கு, இரண்டு குடும்பத்தினரும்சம்மதித்தனர்.கடந்த ஓராண்டுக்கு முன், பிளிகெரே நஞ்சுண் டேஸ்வரா திருமண மண்டபத்தில், கோலாகலமாக திருமணம் நடந்தது. தற்போது இவரது மனைவி ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.இந்நிலையில் கென்ட கன்னசாமிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.அவருடன் சேர்ந்து வாழவும் விரும்புகிறார்.இதையறிந்த மனைவி,கணவரை கண்டித்தார்.இதை பொருட்படுத்தாத கென்டகன்னசாமி, ஒரே வீட்டில் மூவரும் சேர்ந்து வாழலாம் என, பிடிவாதம் பிடித்தார். இதற்கு மனைவி சம்மதிக்கவில்லை. எனவே இவரை விலக்கி வைத்து விட்டு, கள்ளக்காதலியுடன் வாழ கென்டகன்னசாமி விரும்புகிறார். விவாகரத்து அளிக்கும்படி, மனைவியைசித்ரவதை செய்கிறார்.'உன் வயிற்றில் உள்ள குழந்தையை கலைத்து விடு. ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டு என்னை விட்டு சென்று விடு. நீ எனக்கு தேவையில்லை. குழந்தையும் தேவையில்லை' என கூறுகிறார். கணவரின் தொல்லையால் மனம் வெறுத்த மனைவி, மைசூரின் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
மே 24, 2025 08:44

இந்த மாதிரி ஆட்களுக்கு காவல் துறை வேலை கொடுக்குதா. இல்லன்னா காவலர் பணி கிடைச்சுதும் இந்த மாதிரி. ஆகிறாங்களா. இவனுங்க எல்லாம் எப்படி தன் பிள்ளைகளுக்கு role models ஆவாங்க மக்களை ஏமாத்தி பொழைக்கும் பிழைப்பும் ஒரு பிழைப்பா suspension / transfer தைரியம்தான். Dismiss செஞ்சா தெரியும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை