உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  உள்நாட்டு தயாரிப்பு அதிவேக ரயில் வடிவமைப்பு பணிகள் நிறைவு

 உள்நாட்டு தயாரிப்பு அதிவேக ரயில் வடிவமைப்பு பணிகள் நிறைவு

பெங்களூரு: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான, 'பி - 28' அதிவேக ரயிலின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். பெங்களூரின் பி.இ.எம்.எல்., என்ற, ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தை நேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று பார்வையிட்டார். அங்குள்ள அதிகாரிகளிடம் பேசினார். மெட்ரோ ரயில் பெட்டிகளை சோதனையிட்டார். பின், அவர் அளித்த பேட்டி: இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பான, 'பி - 28' அதிவேக ரயிலின் வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்து விட்டன. வரும், 2027ம் ஆண்டிற்குள் ரயில் பயன்பாட்டுக்கு வரும். படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை