கூட்டநெரிசல் தொடர்பான செய்திகள்
வரவேற்புஎன் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில், உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தேசிய அளவில் பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.பசவராஜ் ஹொரட்டி,மேல்சபை தலைவர்முதல்வர் பேரனுக்காகவா?
பெங்களூருக்கு அவப்பெயர்
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறுகையில், ''என் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில், உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தேசிய அளவில் பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது'' என்றார்.ஆர்.சி.பி.,யின் வெற்றி கொண்டாட்டத்தை துக்க நிகழ்வாக மாற்றியதற்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு. ஜமீர் அகமதுகான் மகன், ரிஸ்வான் மகன், முதல்வர் பேரன் ஆகியோர் விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுப்பதற்காக விதான் சவுதா முன் விழா நடத்தப்பட்டு உள்ளது.பிரதாப் சிம்ஹா,முன்னாள் பா.ஜ., - எம்.பி.,.
பெங்களூருக்கு அவப்பெயர்
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறுகையில், ''என் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில், உயர் போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த முடிவை நான் வரவேற்கிறேன். அரசு கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். தேசிய அளவில் பெங்களூருக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது'' என்றார்.
பிரேத பரிசோதனை
கூட்டநெரிசலில் இறந்தவர்களின் உடல்கள் பவுரிங், விக்டோரியா மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இது குறித்த முதற்கட்ட தகவல்களின்படி, 'இறந்தவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். சிலருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளது' என, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
விதான் சவுதாவில் நடந்த பாராட்டு விழா மேடையில், 25 முதல் 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மேடையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் குடும்பத்தினர் என, 200க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.