டெலிவரி ஊழியர்களுக்கு பங்குகள்
புதுடில்லி : லாஜிஸ்டிக்ஸ் எனப்படும் போக்குவரத்து தொடர்பான சேவை வழங்கும் நிறுவனமான டெலிவரி, தன் ஊழியர்களுக்காக, பங்கு விருப்ப திட்டத்தின் கீழ் 1,00,360 பங்குகளை ஒதுக்கீடு செய்து உள்ளது. கடந்த மே 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டம், ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. தொழிலில் தொடர் முன்னேற்றம் கண்டு வரும் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தில் ஊழியர்களையும் பங்கேற்க செய்வதே இதன் நோக்கம் என டெலிவரி நிறுவனம் தெரிவித்துள்ளது.