65:25:10
புவிசார் அரசியல் நெருக்கடிகளின் போது, முதலீட்டாளர்கள் தங்களின் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனை பொறுத்து, ஏற்கனவே திட்டமிட்ட, 'சொத்துப் பங்கீடு' முறையை தொடர்ந்து பின்பற்றுமாறு, 'ஒயிட்ஓக் கேபிடல் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், செய்திகளையோ அல்லது உலகளாவிய அரசியல் மாற்றங்களையோ பார்த்து முடிவெடுக்காமல், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சொத்து பங்கீட்டை பின்பற்றுவது சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க உதவும் என, அந்நிறுவனம் கூறியுள்ளது. நெருக்கடி காலங்களில் சந்தை சரிந்தாலும், பின்னர் மீண்டெழுந்ததை இந்நிறுவன அறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.