உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் இ-பிராப்தி

 உறங்கும் பி.எப்., கணக்குகளுக்கு புத்துயிர் தரும் இ-பிராப்தி

ப யன்படுத்தப்படாத பழைய பி.எப்., கணக்குகளில் தேங்கி கிடக்கும் பணத்தை பயனர்கள் எளிதாக பெறுவதற்காக, 'இ-பிராப்தி' என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதன் வாயிலாக யு.ஏ.என்., எண் இல்லாத பழைய கணக்குகளை ஆதார் உதவியுடன் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். முக்கிய அம்சங்கள்  கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு பல நிறுவனங்களில் வேலை மாறி, யு.ஏ.என்., எண் இல்லாமல் போன பழைய பி.எப்., கணக்குகளை இந்த தளம் வாயிலாக கண்டறியலாம்.  ஆதார் அட்டையை அடிப்படையாக கொண்டு சரிபார்த்து, பழைய கணக்கை பயனர்கள் தற்போதைய யு.ஏ.என்., எண்ணுடன் இணைக்க முடியும்.  பழைய பி.எப்., கணக்குகளில் விடுபட்ட தகவல்களை சரிசெய்து, அதை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ