உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஒரே நாடு; ஒரே கார்டு போன்பே அறிமுகம்

 ஒரே நாடு; ஒரே கார்டு போன்பே அறிமுகம்

சிறப்பம்சங்கள் * இந்த கார்டு 'ப்ரீபெய்ட்' முறையில் செயல்படும் * மொபைலில் சிக்னல் இல்லாவிட்டாலும் அல்லது இன்டர்நெட் இல்லாவிட்டாலும் பேருந்து, மெட்ரோ போன்ற இடங்களில் பணம் செலுத்தலாம் *அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம் * ஒருமுறை 'டேப்' செய்தால் அதிகபட்சமாக 500 ரூபாய் வரை ஆப்லைனில் செலுத்தலாம் * மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்கள், அரசு பேருந்துகள், சுங்கச்சாவடிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து இடங்களிலும் இதை பயன்படுத்தலாம். முதற்கட்டமாக, ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கார்டுகள் வழங்கப்படுகின்றன. விரைவில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் உங்கள் மொபைல் எண்ணை அளித்து, ஓ.டி.பி., சரிபார்ப்புக்கு பின் உடனடியாக இந்த கார்டை பெற்று கொள்ளலாம். இதற்கு வங்கி கணக்கு தேவையில்லை, பணமாகவோ அல்லது யு.பி.ஐ., வாயிலாகவோ 'டாப்-அப்' செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை