உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  இரட்டை இலக்கத்தில் லாபம் தந்த ஸ்மால்கேப் பங்குகள்

 இரட்டை இலக்கத்தில் லாபம் தந்த ஸ்மால்கேப் பங்குகள்

ச மீபத்திய மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட 'ஸ்மால்கேப்' நிறுவனங்களின் பங்குகள், கிட்டத்தட்ட 10 முதல் 45 சதவீதம் வரை லாபத்தை அளித்துள்ளன. முக்கிய காரணங்கள்: 1. பல நல்ல நிறுவனங்களின் விலை அவற்றின் உண்மையான மதிப்பை விட குறைந்து காணப்பட்டது 2. மத்திய பட்ஜெட்டில் அரசின் மூலதன செலவு, உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த தெளிவு கிடைத்துள்ளது 3. இந்தியா - -அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு 4. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. 'ஸ்மால்கேப்' நிறுவனங்களின் வருமானம் நிலையாக இருப்பது, அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை குறைந்து வருவது ஆகியவை சாதகமாக இருந்தாலும், சில நிறுவனங்களின் பங்குகள் சராசரி விலையை விட அதிகமாக இருப்பது, சர்வதேச பொருளாதார மாற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ