ஸ்டார்ட்அப் மோகத்தில் விழுந்து விட வேண்டாம்
தற்போது ஸ்டார்ட்அப் குறித்து அதிக மோகத்துடன் பேசப்படுகிறது. நாகரிக உடை, நவீன பணியிடத்தில் சக பணியாளர்களுடன் ஐடியாக்கள் குறித்து நாள் முழுதும் பேச்சு, நிதி திரட்டுவது குறித்த கூட்டங்கள், சமூக ஊடகங்களில் தத்துவம் வெளியிடுதல், வெள்ளிக்கிழமை மாலை சக பணியாளர்களுக்கு மது விருந்து என, ஸ்டார்ட்அப்கள் எளிதாக முன்னேற்றம் தருவதாக, ஒரு மாயை ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு இரையாகி விட வேண்டாம்.- ராதிகா குப்தாதலைமை செயல் அதிகாரி, எடில்வைஸ் எம்.எப்.,