உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 60க்கு 46: அருணாச்சல்லில் பா.ஜ., அமோகம்: சிக்கிமில் மீண்டும் தமாங் முதல்வராகிறார்

60க்கு 46: அருணாச்சல்லில் பா.ஜ., அமோகம்: சிக்கிமில் மீண்டும் தமாங் முதல்வராகிறார்

புதுடில்லி: அருணாச்சல்லில் உள்ள 60 தொகுதிகளில் 50 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. 50 தொகுதிகளில் 37 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே, 10 தொகுதிகளில் பா.ஜ., போட்டியின்றி வெற்றி பெற்றது. மொத்தம் 60க்கு 46 தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. சிக்கிமில் 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) கட்சி கைப்பற்றி, அபார வெற்றி பெற்றது. தமாங் மீண்டும் முதல்வராகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y84o9zc2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அருணாச்சல பிரதேசம், சிக்கிம் சட்ட சபைகளின் ஓட்டு எண்ணிக்கை இன்று(ஜூன் 02)நடந்தது. . முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அருணாச்சலில் பா.ஜ.,, காங்கிரஸ், என்.பி.பி., மற்றும் சிக்கிமில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) , எல்.டி.எப்., பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முடிவுகளை எதிர்பார்த்து காத்து இருந்தன.

மீண்டும் முதல்வராகின்றனர்

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 தொகுதிகள். இதில் ஆளும் பா.ஜ., போட்டியின்றி 10 தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றது. எஞ்சிய 50 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டன. இதில் 36 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.

60க்கு 46

இதுவரை மொத்தம் 60க்கு 46 தொகுதியில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக இருக்கும் பெமாகாண்டு மீண்டும் முதல்வராக பதவியேற்பார். தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், என்சிபி 3 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் , மற்றவர்கள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

சிக்கிமில் ஆட்சி கட்டில் யாருக்கு?

சிக்கிமில் 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ( எஸ்.கே.எம்.) கட்சி கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இங்கு பிரேம்சிங் தமாங் மீண்டும் முதல்வராகிறார். எஸ்.டி.எப்., - 1 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பிரதமர் மகிழ்ச்சி

அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றி தொடர்பாக பிரதர் மோடி வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எங்கள் கட்சி இன்னும் வீரியத்துடன் பாடுபடும் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Kannappan Ramanathan
ஜூன் 03, 2024 00:27

வருகிற ஜூன் 4ஆம் தேதி, அதாவது குரோதி வருடம், வைகாசி 22ஆம் நாள் அன்று பிஜேபி எதிர்ப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய நடைமுறைகள். 1. மனதளவில் எதையும் தாங்கக்கூடிய வலிமையை பெற இறைவனை வேண்டுங்கள். 2. Hypertension அதாவது ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள், தங்களது குடும்ப மருத்துவரை அணுகி தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரையின் டோஸ் அதிகப்படுத்த வேண்டுமா என்று மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். 3. முடிந்த வரை சன் டிவி மறறும் கலைஞர் டிவி மட்டும் பார்க்கவும், காரணம் அவ்விரு சேனல்கள், பிஜேபி 400 சீட்டுகளை கடந்தாலும் மாலை வரை குறைவாகவே காண்பித்து முடிந்தவரை உங்களை மகிழ்ச்சியில் வைத்திருப்பார்கள். 4. சரக்கு ஸ்காட்ச்சாக இருந்தாலும் சரி நம்ம லோக்கல் டாஸ்மாக்காக இருந்தாலும் சரி, பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தவும். காரணம் கண்ணாடி டம்ளராக இருந்தால் ஒருவேளை கோபத்தில் உடைத்து வீணாக நேரிடும். 5. டிவியில் இருந்து சற்று தொலைவில் அமர்ந்து பார்க்கவும், ஏனெனில் அது காசு கொடுத்து வாங்கிய TV என்பதையும் மறந்து கோபத்தில் அதை உடைக்கும் வாய்ப்புள்ளது. 6. மனைவி மற்றும் குழந்தைகளை உங்கள் மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைப்பது நல்லது. காரணம் உங்கள் கோபத்தை அவர்கள் மீதும் காட்ட வாய்ப்புள்ளது. 7. முடிந்த வரை அலைப்பேசி அழைப்புக்களை தவிர்ப்பது நலம். காரணம், உங்களை வெறுப்பேற்ற என்னைப்போன்ற சங்கிகள் அழைக்கக்கூடும். பிறகு நீங்கள் அந்த அலைப்பேசியை வீசி எறிந்து உடைக்க நேரிடும். 8. நீங்கள் அமரும் இருக்கை நல்ல திடமாக உறுதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும். காரணம் 400 ஐ கடக்கும் போது உணர்ச்சி வசப்பட்டு சரிந்து விழக்கூடும் 9. எந்தச் சூழ் நிலையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். தேவைப்பட்டால் ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையை பெறவும் 10. முன்னெச்சரிக்கையாக அருகில் உள்ள மன நல மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும். உங்கள் நலன் கருதி நான் ?


Prasanna Krishnan R
ஜூன் 03, 2024 14:24

Well said ?.


subramanian
ஜூன் 02, 2024 23:08

வடகிழக்கு மாநில மக்களுக்கு விஸ்வகுரு மோடிஜீயின் சாதனை நன்கு தெரியும். எல்லைகள் பலப்படுத்த வேண்டும்.


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2024 19:22

இன்று உலகம் இருக்கும் நிலையில் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப் பட்டால் ஒழிய தனி மனிதனின் உயிர், உடமை, எதிர்கால பாதுகாப்பு, வருங்கால சந்ததியினரது பாதுகாப்பு இவைக்கெல்லாம் யார் உத்தரவாதம் தர முடியுமோ அதை அறிந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும். இந்த எண்ணம் இல்லாத அரசியல் காட்சிகள் எல்லாம் இந்த நாட்டில் தேச துரோக கூட்டமே என்கிறார்கள் ++ ஒருபாரின் செண்டு பாட்டிலையோ ரொட்டித் துண்டையோ வீசி எரிந்து அதாவது இந்த நாட்டில் எவரையும் விலை கொடுத்து வாங்கி விடலாம் என்று அந்நியர்கள் நினைப்பதற்கு இந்த கூட்டம் தான் முழு காரணம்


MARUTHU PANDIAR
ஜூன் 02, 2024 19:13

இருநூறு அல்லது இரண்டாயிரம், பிரியாணி பொட்டலம்,, டாஸ்மாக்கு, சினிமா, இன்ன குடும்பத்துக்கு வாழ்நாள் விசுவாசம் இவையே தான் வாழ்க்கையின் அம்சங்கள் என நினைக்கும் மூடர் கூட்டமாக மக்களை மாற்றியது பல வகைகளில் தன கோர முகத்தை காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் , இன்று நம் நாட்டை எப்படியெல்லாமோ முடக்க நினைக்கும் அந்நிய சூப்பர் பவர்களை, அவர்களது வஞ்சகம் மிகுந்த திட்டங்களை இப்படிப் பட்ட மக்கள் உணராமல் பார்த்துக் கொள்ளும் வரையில் தமிழகம் வேறு அருணாச்சல வேறு என்று கூறுகிறார்கள் .


J.V. Iyer
ஜூன் 02, 2024 18:48

இதையே பாராளுமென்ற தேர்தலிலும், தமிழகத்திலும் தொடர வாழ்த்துக்கள். இப்போது நானூறா, அல்லது ஐநூறா என்பதுதான் கேள்வி. தமிழகத்தில் இருவது தொகுதிகள் பாஜக கூட்டணி வெற்றிபெறுவது உறுதி என்று பட்சி சொல்கிறது.


என்றும் இந்தியன்
ஜூன் 02, 2024 18:23

பிஜேபியின் வெற்றி ஒரு மோசமான வெற்றி EVM னால் வாக்குச்சீட்டுமுறை இருந்திருந்தால் தான் உண்மையான வெற்றி - முஸ்லிம் நேரு காங்கிரஸ் முதல்....... திருட்டு கயவர்கள் கட்சி வரை - நாளை முதல் பல நாட்கள் வரை காலையிலிருந்து இரவு வரை இதே தெருக்குத்து தெருக்கூத்தாகி தொடரும் விளம்பரத்துக்கு பணம் கொடுத்து


Ashraf ALI
ஜூன் 02, 2024 18:00

EVM , ஹேக்கிங் செய்யப்பட்டது . The count down starts.......


Ashraf ALI
ஜூன் 02, 2024 18:00

EVM , ஹேக்கிங் செய்யப்பட்டது The count down starts......


Jai
ஜூன் 02, 2024 17:49

காங்கிரஸ் கட்சியின் சுணக்கத்தில்தான் பாஜக இவ்வளவு பெரிய வெற்றி 46/60 பெறுகிறது. நாட்டிற்கு நல்ல எதிர்கட்சி தேவை. ஆகவே காங்கிரஸ் திறமை இல்லாத தலைமை கைவிட்டு தங்களை வேறு வகையில் கட்டமைக்க வேண்டும். சிறுபான்மையினரை நம்பி மொத்த கட்சியும் கட்டமைக்க படக்கூடாது.


Ramesh.M
ஜூன் 02, 2024 16:39

ஐயோ. ஜனநாயக படு கொலை. அருணாச்சலில் evm machine hack செய்யப்பட்டுள்ளது. ஆக சிக்கிம் தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பு. ஹிஹிஹி.. நாங்களும் எங்களை தயார் பண்ணிட்டோம் இல்ல . நாள கழிச்சி இந்த பல்லவிய பாடணும் இல்ல. யாருகிட்ட...


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ