உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கியூ.ஆர்., குறியீடு ஸ்கேனர் வைத்து பணம் வசூலிக்கும் பூம்பூம் மாடு

கியூ.ஆர்., குறியீடு ஸ்கேனர் வைத்து பணம் வசூலிக்கும் பூம்பூம் மாடு

பெங்களூரு: இப்போதெல்லாம் பணத்தை கையில் யாரும் எடுத்து செல்வதில்லை. எதுவாக இருந்தாலும், 'போன் பே' அல்லது கியூ.ஆர்., குறியீடு, ஸ்கேனர் பயன்படுத்தி வருகின்றனர்.பெரிய மால்களாக இருந்தாலும், சிறிய சில்லரை கடையாக இருந்தாலும் பண பரிமாற்றம் செய்ய கியூ.ஆர்., குறியீடு வாயிலாக வழியாகவே வர்த்தகம் நடக்கிறது. இந்த வகையில், பிச்சை எடுப்போர் யாரும் பணம் வைத்திருப்பதில்லை. இதனால், பிச்சை எடுப்பவர்கள் கூட நுாதன முறையை சிந்திக்க துவங்கி விட்டனர். 'பூம்பூம்' மாட்டை வைத்து பிச்சை எடுக்க, அதன் தலையில் கியூ.ஆர்., கோடு ஸ்கேனர் அட்டையை மாட்டி வைத்துள்ளனர். பணம் தருவோர் இதை ஸ்கேன் செய்து, பணத்தை செலுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Gopalakrishnan
மே 13, 2024 08:27

அழகர் மாடு நம் கலாச்சாரத்துடன் இணைந்தது ஆகும். பிச்சை எடுப்பதாக இதை கொச்சைப் படுத்த வேண்டாம்.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ