உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பி., இடைக்கால ஜாமின் கோரி மனு

சிறையில் இருந்தே வென்ற சுயேட்சை எம்.பி., இடைக்கால ஜாமின் கோரி மனு

புதுடில்லி: சிறையில் இருந்தே காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற அப்துல் ஷேக் ரஷீத் பதவியேற்பு விழா பங்கேற்க அனுமதி கோரி இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்தார்.ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர் அப்துல் ஷேக் ரஷீத், என்ற இன்ஜினியர் ரஷீத், இவர் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லாவை 2 லட்சத்து 4 ஆயிரத்து 528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் எம்.பி.யாக பதவியேற்க தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி சந்தர்ஜித்சிங் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி பதில் மனு அளிக்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆரூர் ரங்
ஜூன் 07, 2024 11:57

பாரத அரசியல் சட்டத்தையே ஏற்காத இவருக்கு எம்பி பதவி எதற்கு? பார்லிமெண்டில் நுழையவும் தடை விதிக்க வேண்டும்.


spr
ஜூன் 07, 2024 10:12

"எம்.பி.யாக பதவியேற்க தனக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி" பொதுவாக குற்றம் சாட்டப்பட்டவரையே தேர்தலில் நிற்க அனுமதிக்கக்கூடாது என்பதே மக்கள் விருப்பம் இங்கே பயங்கர சதக் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து சிறையில் அடைக்கப்பட்டவரை நிற்க அனுமதித்தது பெரிய தவறு ஏற்கனவே சிறையில் இருந்து கொண்டே ஒருவர் அமைச்சர் பதவி வகிக்கிறார் சட்டத்தில் உள்ள ஓட்டைகள், தவறு என அறிந்தும் நீதிமன்றங்கள் கண்டு கொள்ளாதது வியப்பில்லை ஏனெனில் அவர்களுக்கு நியாயம் என்பதனைவிட சட்டம், மனித உரிமை இவைதான் முக்கியம். அதனாலேதான் ஆதாயமும். ஆனால் சட்டமியற்றும் அதிகாரமிருந்தும் இதெல்லாவற்றையும் கண்டுகொள்ளாமல் இருந்த மோடி தனிடிக்கப்பட வேண்டியவர் என்பதால் அதற்கான பலனை இன்று அனுபவிக்கிறார். குற்றவாளிகளைத் தண்டிக்காத மோடி இதற்கான தார்மீகப் பொறுப்பேற்று பிரதமர் பதவிக்குப் போட்டியிடாமல் விலகினால் எதிர்க்கட்சிகளோடு இந்தத் தவறுகளை பொறுக்க முடியாது, அவருக்கு எதிராக வாக்களித்த மக்களும் பாராட்டுவார்கள்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை