உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை நெட்வொர்க்கிற்கு மூளை; மும்பையை சேர்ந்த நவீன் சிக்கார்

போதை நெட்வொர்க்கிற்கு மூளை; மும்பையை சேர்ந்த நவீன் சிக்கார்

மும்பை: இந்தியாவில் செயல்படும் மிகப் பெரிய போதைப்பொருள் நெட்வொர்க்கிற்கு, மூளையாக இயங்குவது, மும்பையை சேர்ந்த நவீன் சிக்கார் என்பது தெரிய வந்துள்ளது. பல நாடுகளில் வசிக்கும் அவரது கூட்டாளிகள் வாயிலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை, உலக நாடுகளில் அவர் விற்று வருகிறார். தற்போது தலைமறைவாக உள்ள அவரை, போலீசார் தேடுகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tajxem0o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

படித்த நபர்கள்

போதைப் பொருள் மற்றும் போதை வஸ்துகளை விற்பதில், படிக்காதவர்களைக் காட்டிலும், நன்றாக படித்தவர்களே பெரும்பாலும் ஈடுபட்டு உள்ளனர். அதிலும், வெளிநாடுகளில் உள்ள பல்கலைகளில் படித்த பலரும், அந்த தொழிலில் இறங்கியுள்ளனர் என்ற அபாயகரமான தகவலை, மும்பை போதைப்பொருள் தடுப்பு போலீசார் கூறியுள்ளனர்.படித்த நபர்கள் வாயிலாக, பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள், உலகம் முழுதும் விற்கப்படுகின்றன என்பதை, மும்பை போதைப்பொருள் ஒழிப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.அவர்களில் நவீன் சிக்கார் என்ற இளைஞர், மும்பை அருகே உள்ள நவிமும்பையை சேர்ந்தவர். போதைப்பொருள் விற்பனை நெட்வொர்க்கிற்கு மூளையாக செயல்படும் இவர், லண்டனில் கிரிமினல் சைக்காலஜி படித்துள்ளார். மேலும், சினிமா மற்றும் 'டிவி' தொடர்பான படிப்பையும் முடித்துள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை

தற்போது இவர், எந்த நாட்டில் இருக்கிறார் என தெரியாத வகையில், தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். அதுபோல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும், வெளிநாடுகளில் படித்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் தெரிய வந்துள்ளது.பெரும்பாலும், அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்களில், வேறு பெயர்களில் அனுப்பி வைக்கப்படும் இந்த போதைப்பொருட்கள், மும்பை நகருக்குள் வினியோகிக்கப்படுகின்றன. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.இவர்களுக்குள் பண பரிமாற்றம் பெரும்பாலும், 'ஹவாலா' என்ற சட்ட விரோத முறையில் தான் நடத்தப்படுகிறது. 1,128 கோடி ரூபாய் அளவிற்கு, கடந்த இரண்டு ஆண்டு களில் இந்த கும்பல், போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளது.இந்த கும்பலிடம் இருந்து, 11.540 கிலோ கோகைன், 4.9 கிலோ கஞ்சா, 5.5 கிலோ போதை சாக்லேட்டுகள், 1.60 லட்சம் ரூபாய் போன்றவற்றை, மும்பை போதைப் பொருள் ஒழிப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Sivan A
மார் 05, 2025 16:07

பாய்.. அது என்ன தமிழ்நாடா பாய் அயலக அணியில் சேர.. யார் தவறு செய்தாலும் முதலில் கண்டியுங்கள்.. ஜாதி பார்த்து மதம் பார்த்து கண்டிப்பதையா மார்க்கங்கள் சொல்லித்தருகின்றன? உங்களை மூளைச் சலவை செய்து எதிர்ப்பைத் தூண்டி விட்டு அவர்கள் ஊழல் செய்கிறார்கள்..உங்கள் அறியாமையை எந்த இறைவன் அகற்றுவானோ தெரியவில்லை..


abdulrahim
மார் 05, 2025 13:54

ஓஹோ மும்பையை சேர்ந்தவரா அப்படின்னா சங்கிகள் இந்த செய்திக்கு கமெண்ட் பண்ண வர மாட்டார்கள் ,இந்நேரம் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்திருந்தால் அப்பப்பா ....


Azar Mufeen
மார் 05, 2025 12:46

அட வர பணத்தை பாதி இப்போ ஆளும் கட்சிக்கு கொடுத்துட்டு கட்சியில் சேர்ந்துட்டா உடனே புனிதர் ஆகிவிடுவார்


RAJ
மார் 05, 2025 08:14

ரொம்ப பெருமியே இற்கே...


Kasimani Baskaran
மார் 05, 2025 05:17

படிக்காத அயலக அணி கூட இந்தவேலையைத்தானே செய்தது. நாலு பேரின் வாழ்க்கையை நாசம் செய்ய மனமிருந்தாலேயே போதும்.. பெற்றோர் பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது.


முக்கிய வீடியோ