உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப். ரெய்டு: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப். ரெய்டு: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பொகாரோ: ஜார்க்கண்டில் நக்லைட்டுகள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.பொகாரோ மாவட்டம், கோமியோ போலீஸ் எல்லைக்குட்பட்ட பிர்ஹோர்டெரா வனப்பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் வழக்கமான தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நக்லைட்டுகள் திடீரென பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8riysbj0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் இறங்கினர். இரு தரப்பிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் நச்சல் சீருடையும், மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்துள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் விட்டுச் சென்ற ஏகே 47 ரக துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து பொகாரோ எஸ்.பி. ஹர்விந்தர் சிங் கூறுகையில், இன்னமும் நக்லைட்டுகளை தேடும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம் என்றார். ஜார்க்கண்ட் ஐ.ஜி., மைக்கேல் ராஜ் கூறுகையில், ஒரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்துள்ளார். நக்சலைட்டுகள் பற்றி முக்கிய தகவல்கள் கிடைத்துச் சென்றோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜூலை 16, 2025 13:18

2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை. இது தரமான செயல். இப்படி செய்வதை விட்டுவிட்டு, கைது செய்வது, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது, நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து அவர்களை மீண்டும் வெளியில் விடுவது... சரியல்ல.


முக்கிய வீடியோ