உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபரிமலையில் மண்டல காலத்தில் 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்; வருமானம் ரூ.297 கோடி

சபரிமலையில் மண்டல காலத்தில் 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம்; வருமானம் ரூ.297 கோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை: சபரிமலையில் மண்டல காலம், டிச., 26ல் நிறைவு பெற்று, அன்றிரவு நடை அடைக்கப்பட்ட பின்னர் டிச., 30 மாலை நடை திறந்து, மகர விளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன. அன்று முதல் சபரிமலையில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக காட்டுப்பாதைகளில் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பாஸ் ரத்து செய்யப்பட்டது. நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேவசம்போர்டு தெரிவித்தது.நேற்று முன்தினம் வரை, 32.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தி உள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

கடந்த ஆண்டு இதே கால அளவில், 28.42 லட்சம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் நடத்தி இருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 4 லட்சம் பக்தர்கள் அதிகம் வந்துள்ளனர். இதில், 5 லட்சத்து 66,575 பேர் ஸ்பாட் புக்கிங் மூலம் சன்னிதானத்துக்கு வந்துள்ளனர். கடந்த ஆண்டு 4 லட்சத்து 20,269 பக்தர்கள் மட்டுமே ஸ்பாட் புக்கிங் வசதியை பயன்படுத்தி இருந்தனர். 74,874 பக்தர்கள் புல் மேடு வழியாக வந்துள்ளனர்.41 நாள் மண்டல காலம் நிறைவு பெற்றபோது, 297 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது, 214.82 கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் 124 கோடியும், காணிக்கையாக 80.25 கோடியும் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

jayvee
ஜன 04, 2025 18:29

இதென்ன பிரமாதம் நாங்க தீவாளிக்கு ரெண்டே நாளில் 420 கோடிகள் வருமான ஈட்டினோம்.. இப்போது பொங்கலுக்கு ஆறு நாள் லீவு .. எப்படியும் 1200 கோடி சம்பாதிப்போம்


அப்பாவி
ஜன 04, 2025 10:30

கிட்டத்தட்ட ஒரு ஆளுக்கு 950-1000 ரூவா காணிக்கை போட்டிருக்காங்க. பரவாயில்லை.


pmsamy
ஜன 04, 2025 10:28

இந்தியா வல்லரசு ஆகிவிடும்


M. PALANIAPPAN
ஜன 04, 2025 10:13

297 கோடி ரூபாய், நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும், ஸ்வாமியே சரணம் அய்யப்பா


Subramanian
ஜன 04, 2025 06:50

சுவாமியே சரணம் ஐயப்பா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை