உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நேபாளத்தின் அமைதி, செழிப்புக்கு இந்தியா உதவும்: இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு

நேபாளத்தின் அமைதி, செழிப்புக்கு இந்தியா உதவும்: இடைக்கால அரசுக்கு பிரதமர் மோடி ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.நமது அண்டை நாடான நேபாளத்தில் சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் கடந்த 8ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். இது வன்முறையில் முடிந்தது. நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்தனர். இதன் பின் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அந்நாட்டில் பிரதமர் ஆன முதல் பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்,''நேபாளத்தின் இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ள சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சாமானியன்
செப் 13, 2025 20:40

வெளியுறவுத் துறை நேபாளத்தை தினமும் கண்காணிக்க வேண்டும். முடிந்தால் ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத்தை சிலவாரங்களுக்குப் பிறகு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் துணையுடன் ஒரு வாரம் அரசியல் பயணம் செய்யலாம். அவர்களின் தேவையை அறிந்து உதவலாம். உ.பி. முதல்வரும் கூட செல்லலாம்.


அப்பாவி
செப் 13, 2025 15:09

போடு. அப்கே பார் சுசிலாக்கீ சர்க்கார்...


Narayanan Muthu
செப் 13, 2025 12:37

இப்போதுதான் நிலைமை கட்டுக்குள் வருவதாக செய்திகள் வருகிறது.


Vasan
செப் 13, 2025 12:12

My father says that those days, most of the residential security jobs were done by immigrants from Nepal, fondly called by us as Ghoorkhas But these days, they arent seen much.


புதிய வீடியோ