உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம்: பயணிகள் அவதி

புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம்: பயணிகள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: தாய்லாந்தின் புகெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட 16 நிமிடங்களுக்கு பிறகு, ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் விமானம் (Boeing 737 Max 8) இன்று (ஜூலை 19) காலை 6.41 மணிக்கு தாய்லாந்தின் பூகெட்டிற்கு புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்கே திரும்பி வந்தது. விமானம் தாய்லாந்திற்கு செல்லாமல், மீண்டும் தரையிறங்கியதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு தான் அவசர தரையிறக்கத்திற்கு காரணம் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். விமானத்தில் பயணம் மேற்கொண்ட பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:பயணிகளின் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானங்கள் தாமதம் ஏற்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிக முக்கியம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.கடந்த சில தினங்களாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதும், புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்படுவதும், தாமதமாக இயக்கப்படுவதும் பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Varadarajan Nagarajan
ஜூலை 19, 2025 18:48

சமீபகாலமாக ஏர் இந்தியா விமானங்கள் மட்டுமல்லாது மற்ற நிறுவனங்களின் பல விமானங்கள் தொழில்நுட்பக்கோளாறால் தாமதமடைகின்றது. மொத்தத்தில் விமானங்களுக்கு நேரம் சரியில்லை போலுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே அதி முக்கியம் என்பதால் விமானங்கள் மீண்டும் தரையிறக்கப்பட்டு பழுது சரிசெய்து பயணிக்கின்றன. இதில் பயணமேற்கொள்ளும் பயணிகளுக்கு நிச்சயம் சிரமங்கள் உண்டு ஆனால் அவை தவிர்க்கமுடியாத நிலை.


Ramesh Sargam
ஜூலை 19, 2025 16:45

எரிபொருள் சுவிட்ச் ஆன் செய்ய மறந்துட்டாங்களா?


D.Ambujavalli
ஜூலை 19, 2025 16:44

தாமதமானாலும் குறையைச் சரி செய்தோ, மாற்று விமானம் ஏற்பாடு செய்தோ, பயணிகளை பத்திரமாக ஊர் சேர்க்க வேண்டுமே என்ற அதீத அக்கறை காரணமாகவும் இருக்கலாம்


D.Ambujavalli
ஜூலை 19, 2025 16:41

ஒரு வேளை, , அஹமதாபாத் விபத்தைப்போல் ஆகிவிடுமோ என்ற பயத்தில், சிறு குறை தென்பட்டாலும் எதற்கு risk என்று தாமதமானாலும் சரி செய்திசெய்தொ


vbs manian
ஜூலை 19, 2025 15:42

விமான பயணத்துக்கு போதாதா காலமா. ஏர் இந்தியா மட்டுமல்ல. இண்டிகோ ஸ்பீஸ் ஜெட் விமானங்களும் அவதிக்குள்ளாகின்றன. லண்டனில் ஒரு விமானம் கிளம்பியவுடன் தீக்கிரை. வானில் சுனாமியா.


Indian
ஜூலை 19, 2025 14:46

மொத்த ஏர் இந்தியா விமானங்களும் பழுதா ?? . உயிர்க்கு உத்தரவாதம் உண்டா ?


அப்பாவி
ஜூலை 19, 2025 14:32

ஹை. எல்லா விமானங்களையும் காயலாங்கடைக்கு போட்டுட்டு புதுசா வாங்கணும் போலிருக்கே. டாட்டாவுக்கே அல்வா குடுத்திடுச்சு நம்ம ஏர் இந்தியா. யாரு கிட்டே?


SANKAR
ஜூலை 19, 2025 15:35

my surmise is airindia takes precautions very seriously now and as such these happens this is not restricted to India net says technical issues delay affects all airlines all over the world and a minimum of 5 such incidents reported per week all over the world. even american airlines are affected.


Thravisham
ஜூலை 20, 2025 07:25

ஏர் இந்திய நிறுவனம் தன் நிறுவன விமானங்களை/ ஊழியர்களை/ நடைமுறைகளை சர்வதேச முறையில் கம்ப்ளீட் ஓவர் ஹால் செய்ய வேண்டியது மிக முக்கியம்.


சமீபத்திய செய்தி