உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வளர்ச்சியடைந்த பாரதம் உருவாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடில்லி: ''நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்'' என பிரதமர் மோடி தெரிவித்தார்.ஒன்று பட்ட இந்தியாவில் இருந்து 1947 ஆக.,14 ல் பாகிஸ்தான் பிரிந்தது. இரு நாடுகளில் இருந்தும் மக்கள் இடம் பெயர்ந்தனர். உலகின் பெரிய இடப்பெயர்வாக அது அமைந்தது. அப்போது நிகழ்ந்த வன்முறை, வெறுப்பு, துன்புறுத்தல்கள், காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பிரிவினையின் போது உயிரிழந்த பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நினைவு கூறும் விதமாக மத்திய அரசு சார்பில் ஆகஸ்ட் 14ம் தேதி பிரிவினை கொடுமையின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இன்று பிரிவினை கொடுமையின் நினைவு தினம். இதனை கொடுமைகளை நினைவுகூர்கிறேன். வரலாற்றில் பலரின் வாழ்க்கையைச் சிதைத்த ஒரு தருணம். ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.அன்புக்குரியவர்கள் பறிபோனார்கள், அளவற்ற துன்பங்கள் அனுபவிக்கப்பட்டன. அதே சமயம், இதையெல்லாம் கடந்து, மக்கள் தங்கள் வாழ்க்கையை ஒன்றுமில்லாததிலிருந்து மீண்டும் கட்டியெழுப்பி, இடர்களைச் சாதனைகளாக மாற்றி, நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தனர். அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் நமக்கு வலிமையை நினைவூட்டுகின்றன. இந்த நாள், நமது தேசத்தில் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதற்கும், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உணர்த்துகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பேசும் தமிழன்
ஆக 15, 2026 07:47

. நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் போதும்.... அவர்கள் இருப்பது கட்டு சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்து கட்டிய கதை தான் நியாபகம்துக்கு வருது.


அப்பாவி
ஆக 14, 2026 12:25

ஒருத்தரே மெடல் வாங்கிட்டிருந்தா எப்பிடி அடுத்தவன் முன்னேற்றம் அடைவது?


Kumar Kumzi
ஆக 14, 2026 14:41

ஸ்டாலின் கிட்ட போ ஒனக்கு பொருத்தமான டாஸ்மாக் மெடல் கெடைக்கும்


gopi
ஆக 14, 2026 16:26

அப்பாவிக்கு தினமும் தண்ட சோறு போடும் அவர் பெற்றவர்களை பாராட்டவேண்டும்


பேசும் தமிழன்
ஆக 15, 2026 07:48

அட நீங்க வேற....


mindum vasantham
ஆக 14, 2026 09:48

இந்தியா என்பது பல்வேறு இனங்கள் கொண்ட நாடு ஜாதி கட்டமைப்பு முறையால் இந்த இன அடையாளங்கள் கட்டமைக்கப்பட்ட்டுள்ளது


Mario
ஆக 14, 2026 08:50

நீட் பேப்பர் லீக் மாதிரி


sathyanarayanan
ஆக 14, 2026 09:43

london போனாலும் சோத்துக்கு மதம் மாறிய பிச்சைக்காரன் கொத்தடிமைதான் . பாதி முஸ்லிம் பாதி கிறிஸ்டியன் ராகுல் போலி காந்தி செய்தால் அமைதியாக இருப்பாய்? மத வெறியில் இருந்து வெளியே வாடா


நரியோ
ஆக 14, 2026 09:53

கூலிக்கு மாரடிக்கும் ஈன பிறவி லண்டன் மரியோ


vadivelu
ஆக 14, 2026 10:30

அந்த 50 கோடி மக்களில் நீங்களும் ஒருவர். உங்களில் சிலர்தான் நீட் பேப்பர் லீக் செய்தீர்கள் ,ஒன்றா இரண்டா , 12 வருடங்களாக தலை கீழாக நடந்து உங்கள் வன்மத்தை கொட்டுகிறீர்கள். பாவம் எல்லாம் டுபாக்கூர் திட்டமாகவே போய் விடுகிறது. நீங்க 50 கோடி இருக்கலாம், நினைவில் வையுங்கள் நலமாக இருப்பவர்கள் 80 கோடிக்கும் மேல்.பாவம் நீங்கள், உங்கள் பிரார்த்தனை பலிக்க வில்லை, போவதும் இல்லை.நல்லதிகா வேண்டுங்கள் நடக்கும்


Raman
ஆக 14, 2026 10:35

The local 200 op disguised as London op..fact, op is op, third class stuff only,


Barakat Ali
ஆக 14, 2026 08:49

உத்தராகண்ட் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது .... தொழிலாளர்கள் 6 பேர் பலியான சோகம் ..... இந்த நிலையில் வளர்ச்சியடைந்த பாரதம் எங்கேயிருந்து வரும் ??


vadivelu
ஆக 14, 2026 10:33

தினம் தினம் அங்கங்கே ஏதாவது சோகம் நடக்கத்தான் செய்கிறது, அதற்கும் ஒரு நாடு வளர்ச்சியை அடைவதாக சொல்வதை மறுப்பதற்கும் என்ன முடிச்சு


gopi
ஆக 14, 2026 11:26

மட மண்டை உனக்கு சோறு கிடைக்கவில்லை என்றால் பாரதம் வளர்ச்சி அடையவில்லை என்று சொல்வாயா


Barakat Ali
ஆக 14, 2026 12:19

அறிவாளிகளா .... வளர்ச்சியடைந்த பாரதம் அனைத்தையும் உள்ளடக்கியதுதான் .... இந்தூரில் பாஜக உள்ளாட்சிக்கு உட்பட்ட பகீரத்புராவில் குடிநீர் நோய்த்தொற்றால் பல குழந்தைகள் பரிதாபமாக இறந்தன .... நினைவிருக்கிறதா ?? நாட்டையே உலுக்கிய சம்பவம் .....


gopi
ஆக 14, 2026 17:52

barakat ali, medan.... போன மாதம் கூட medan நகரத்தில் குண்டு வெடித்து மூன்று மாடி கட்டடம் தரை மட்டம் ஆனது....அப்படியா


Kumar Kumzi
ஆக 14, 2026 18:26

பாக்கிஸ்தான்ல ஒவ்வொரு நாளும் குண்டு வச்சி ஒருத்தன ஒருத்தே கொல்லுறானுங்க அப்புறம் எதுக்கு அமைதி மார்க்கம்னு Solluranunga


பேசும் தமிழன்
ஆக 15, 2026 07:52

விபத்துக்கும்... வளர்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மதம் கண்ணை மறைக்கிறது


Barakat Ali
ஆக 14, 2026 08:45

திமுக, தேசிய வாத காங்கிரஸ் - சரத்பவார் கட்சி - இதுங்க கூடல்லாம் உறவு வெச்சுக்கிட்டு வளர்ச்சியடைந்த பாரதம் ன்னு நீங்க சொல்றது உலக மஹா மஹா உருட்டு சாமி .... இருந்தாலும் உங்களுக்கு அரசியல் மாற்று என்பது நாட்டுக்கே ரொம்ப ஆபத்தான மாற்றாக இருப்பதால் உங்களையே அழுதுக்கிட்டே ஆதரிக்கிறோம் .....


R Dhasarathan
ஆக 14, 2026 14:24

சரியாக சொன்னீர்கள்.


பேசும் தமிழன்
ஆக 15, 2026 07:55

நீங்கள் ஆதரிக்கிறோம் என்று சொல்வதை சின்ன குழந்தை கூட நம்பாது....


R Dhasarathan
ஆக 14, 2026 08:31

உள்ளூர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். ராமேஸ்வரம் சென்று இருந்தேன். கழிவறைகள் மக்களின் அளவுக்கு அங்கு இல்லை. இரயில் நிலையத்தில் ஒரேயொரு கழிப்பறை 17 பேர் வரிசையில் அரசு செய்ய வேண்டியது நிறைய உள்ளன, மக்களின் உழைப்பு பல வழிகளில் வீணாகிறது... வேதனையாக இதை பதிவிடுகிறேன். Crowd handling we failed இங்கே வளர்ச்சி இருக்க வேண்டும். அரசியல் வாதிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை புரிந்து கொள்ளவில்லை...


viki raman
ஆக 14, 2026 08:18

indraiya mudhalwar naalaiya piradamar walga walga walgaveeeeee


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 14, 2026 08:15

பாஸ் எங்க முதல்வர் கர்த்தரின் சீடர் ஜோசப் சார் 2.4 லக்சம் கோடி ஏற்றுமதி செய்து சாதனை படைத்து உள்ளார், அது மட்டும் இல்ல 10000 கோடிக்கு முதலீடு ஈர்த்து உள்ளார், 3 மாத உழைப்பு, நீங்க? ஜோசப் சார் பிரதமர் ஆனால் மட்டுமே இந்தியா வளர்ச்சி அடையும்


புதிய வீடியோ