உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி

உத்தவ் - ராஜ் தாக்கரேவை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்: பட்னவிஸ் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார்,'' என மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கூறியுள்ளார்.மஹாராஷ்டிராவில், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் மூன்றாவது மொழியாக ஹிந்தி மொழி கற்பிக்கப்படும் என அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த உத்தவ் தாக்கரே, அவரது சகோதரர் ராஜ் தாக்கரே இருவரும் இருபது ஆண்டு பகையை மறந்து ஹிந்தி எதிர்ப்பு பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர்.ஆனால், மாநில அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்கியது. இதனையடுத்து இந்த பேரணியை வெற்றி பேரணியாக நடத்தப்படும் என உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே அறிவித்தனர். இன்று நடந்த பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, '' சிவசேனா தலைவர் பால் தாக்கரே செய்ய முடியாததை பட்னவிஸ் செய்துவிட்டார். என்னையையும், உத்தவையும் ஒன்று சேர்த்துவிட்டார்,'' எனக்கூறினார். மேலும் இருவரும் மாநில அரசை கடுமையாக விமர்சித்து பேசினர்.இதற்கு பதிலளித்து பட்னவிஸ் கூறியதாவது: உங்களை ஒன்று சேர்த்ததற்காக பால் தாக்கரே என்னை ஆசிர்வதிப்பார். இருவரும் வெற்றி பேரணி நடத்துவதாக கூறினார்கள். ஆனால், அது துக்க வீட்டில் பெண்கள் அழுவதை போல் இருந்தது. மொழி கொள்கையை பற்றி பேசாமல், மாநில அரசு கவிழ்வதை பற்றியும், மீண்டும் ஆட்சிக்கு வருவது பற்றி மட்டுமே பேசினர். மராத்தி மக்களுக்கான உரிமையை நாங்கள் வழங்கினோம். இதனால், அவர்களுக்கு எங்கள் மீது பொறாமை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
ஜூலை 06, 2025 12:36

ஆனால் உங்கள் டெல்லி தலைமை உங்களுக்கு ஆப்பு வைத்து விடுவார்களே!


manjagrup
ஜூலை 06, 2025 12:59

வயிற்று எரிச்சல் பதிவுகள்


V RAMASWAMY
ஜூலை 06, 2025 08:32

அரசியல்வாதிகள் பேசுவது அவர்களது சுயலாபத்திற்காகவே அன்றி மக்கள் நலனுக்காக அல்ல. எந்த மாநிலத்திலாவது மாநில மொழி மட்டும் படித்து வேறு எந்த மாநிலத்திற்கோ வேறு நாட்டிற்கோ செல்லாத அந்த மாநிலத்திலேயே வேலை கிடைக்கக்கூடிய வசதிகள் ஏற்படுத்த முடிந்தால் மட்டுமே அவர்களுக்கு மற்ற மொழிகள் பற்றிய போராட்டங்கள் நடத்த தகுதிகள் உண்டு. மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற என்னென்ன தேவையோ அவற்றை எங்கிருந்தாலும் தேடி தகுதியடைந்து வேறு மாநிலங்களுக்கோ வேறு நாட்டிற்கோ சென்றுகொண்டுதானிருப்பார்கள். அந்த உரிமையில் அரசியல்வாதிகள் தலையிடாமல் மற்ற மக்கள் நல்வாழ்வாதாரம் பெற செயல்களை செய்தால் அதுவே அவர்கள் மக்களுக்கு செய்யும் நற்பணிகள்.


தஞ்சாவூர் மாமன்னர்
ஜூலை 06, 2025 08:08

என்ன ஆனாலும் நம்ம துண்டு சீட்டு thatthi ய அடிச்சிக்க முடியாது. மொழி போர் நோபள் பரிசு குடுக்கலாம்


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 20:02

ஈரோடு ராமசாமி அவர்கள் கூறியது. எனக்கு உண்மையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படுவது பற்றியோ அல்லது அதனால் தமிழ் அழிந்துவிடும் என்பது பற்றியோ ஒரு கவலையும் இல்லை. நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு கிளர்ச்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு தொல்லை கொடுக்க வேண்டுமென்பதற்காகவே நான் அதுபோல் பயன்படுத்திக் கொண்டேன் ,( இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும், பக்கம் 30)


அப்பாவி
ஜூலை 05, 2025 19:58

இந்தியை சேக்காம இருங்க. அது போதும். சேத்தா மராத்தி அம்பேல் ஆயிடும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 05, 2025 20:12

ஒன்னும் ஆகாது.....இப்பவே பத்து வார்த்தை பேசினால் அதில் இரண்டு வார்த்தைகள் தாய்மொழியிலும் மூன்று வார்த்தைகள் சமஸ்கிருதமும் எஞ்சிய ஐந்து வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இருக்கிறது.... இதில் தாய் மொழிக்கு வக்காலத்து.....முதலில் தாய் மொழியை பிழையில்லாமல் எழுதவும், பேசவும், படிக்கவும் கற்றுக்கொண்டு இந்தியை எதிர்க்கலாம்..... தமிழ்தான் எங்கள் உயிர் என பொங்குவது.... ஆனால் தம் பிள்ளைகளை முதல் மொழி ஆங்கிலம் இரண்டாம் மொழி தமிழில் சேர்ப்பது....இது என்ன மாதிரியான பிழைப்பு.....!!!


புதிய வீடியோ