உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பீஹார் தேர்தல்: ஓட்டு சதவீதத்தில் ஆர்.ஜே.டி., முதலிடம்

 பீஹார் தேர்தல்: ஓட்டு சதவீதத்தில் ஆர்.ஜே.டி., முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீ ஹார் சட்டசபை தேர்தலில் லாலுவின் ஆர்.ஜே.டி., எனப்படும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வி அடைந்தாலும், 23 சதவீத ஓட்டுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. முன்னாள் முதல்வர் லாலுவின் ஆர்.ஜே.டி., கடந்த தேர்தலில், 75 இடங்களை வென்றிருந்த நிலையில், இந்த முறை வெறும் 25 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே போல் கடந்த முறை, 19 இடங்களில் வென்ற காங்., இந்த முறை, 6 இடங்களில் மட்டுமே வென்றது. ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. போட்டியிட்ட 238 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே டிபாசிட் பெற்றது. 236 இடங்களில் அக்கட்சி டிபாசிட் இழந்தது. இந்நிலையில், தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும் ஓட்டு சதவீதத்தில் லாலுவின் ஆர்.ஜே.டி., கட்சி, 23 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக பா.ஜ., 20.08 சதவீத ஓட்டுகளும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம். 19.25 சதவீத ஓட்டுகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. காங்., 8.71 சதவீத ஒட்டுகளை பெற்றது. அதே சமயம் கடந்த, 2020 தேர்தலை ஒப்பிடும்போது, ஆர்.ஜே.டி., 144 தொகுதிகளில் களமிறங்கி, 75 தொகுதி களில் வென்று 23.11 சதவீத ஓட்டுகள் பெற்றிருந்தது. அந்த வகையில் இந்த தேர்தலில் அதன் ஓட்டு சதவீதம் சற்றே சரிவு கண்டுள்ளது. கடந்த தேர்தலில், 110 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., 19.46 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது. இந்த முறை 9 தொகுதிகள் குறைவாக, 101 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.08 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதன் மூலம் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே போல், 2020 தேர்தலில், 115 தொகுதிகளில் போட்டியிட்டு, 15.39 சதவீத ஓட்டுகளை பெற்ற ஐக்கிய ஜனதா தளம், இந்த முறை, 101 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, 19.26 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன் மூலம் நிதிஷ் கட்சியின் ஓட்டு சதவீதமும் கணிசமாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பேசும் தமிழன்
நவ 16, 2025 16:22

இப்படியே எதையாவது சொல்லி மனதை தேற்றி கொள்ள வேண்டியது தான்.... தோல்வி ஏற்பட்டது ஏற்ப்பட்டது தானே !!!


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 16, 2025 08:13

கருணாநிதி கூட ஒவ்வொரு முறை தோற்கும் போதும் இது போன்று தான் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார்.


தியாகு
நவ 16, 2025 07:31

பீகாரின் கட்டுமரம் இவர். எவ்வளவு ஊழல் செய்தாலும் தலைமுறையாக கட்டுமர கட்சிக்கு தற்குறி டுமிழர்கள் ஓட்டு போடுவதுபோல பீகாரிலும் தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகள் உண்டு.


Rajasekar Jayaraman
நவ 16, 2025 07:26

243 தொகுதியிலும் RJD போட்டி இட்டிருந்தால் இன்னும் சதவீதம் அதிகமாக இருக்குமே


திகழ் ஓவியன், AJAX AND
நவ 16, 2025 06:57

தேர்தல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் யாருக்கு எண்ணிக்கை உ‌ள்ளதோ அவர்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். வாக்கு சதவீதம் அடிப்டையில் அல்ல. இதுகூட தெரியாத தற்குறி என்றால் நீ அரசியலில் இருக்கவே தகுதி இல்லை. தெரிந்தும் இப்படி கூறினால் உன்னை வாழ்நாள் சிறையிலே அடைக்க வேண்டும் மக்களை தவறான தகவல் கொடுத்து திசை திருப்பும் செயல். நீ எல்லாம் எப்படி முதல்வர், மத்திய அமைச்சர்....கேவலம்...உன் மகன் 8 ஆம் வகுப்பு கூட தேற வில்லை. அதுதான் மக்கள் நிராகரித்து விட்டனர். போய் அந்திம காலத்திலாவது எதேனும் உருபடியா செய்


Kasimani Baskaran
நவ 16, 2025 06:42

கூட்டாக போட்டியிடும் பொழுது ஒட்டு சதவிகிதம் சொல்லுவது தீம்க்கா ஸ்டைல். ஊழலுக்கு இந்த அளவுக்கு ஆதரவு என்றால் ஜாதி அல்லது வேறு ஏதோ ஒரு காரணிதான் இருக்க முடியும்.


Mohanakrishnan
நவ 16, 2025 05:40

Hope this news channel is not from group of bharathi medias


rama adhavan
நவ 16, 2025 05:03

ஆர் ஜே டி 143 இடங்களில் போட்டி இட்டது. ஆனால் பி ஜே பி யோ 101 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. 89இல் வென்றது.


Priyan Vadanad
நவ 16, 2025 02:36

ஆக மொத்தத்தில் காங்கிரசின் ரத்தம் உறிஞ்சப்பட்டுள்ளது. உப்பு சப்பில்லாத விஷயங்களை ராகுல் திரும்பத்திரும்ப பேசி காங்கிரசுக்கு ஆதரவாக இருந்த மக்களின் கழுத்தறுப்பு போராட்டம் தேர்தல் சமயத்தில் நடத்தினால் இப்படித்தான் நடக்கும்.


vivek
நவ 16, 2025 06:07

உனக்கே அது லேட்டா தான் புரியுதுப்...என்ன செய்வது பிரியன்


புதிய வீடியோ