உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது சி.பி.எஸ்.இ.,

 மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல் வெளியிட்டது சி.பி.எஸ்.இ.,

புதுடில்லி: மும்மொழி கொள்கை தொடர்பாக, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போதைய கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை தற்போது ஏழு, எட்டு மற்றும் ஒன்பதா-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்புக்கு செல்லும் போது மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை ஏழு, எட்டு மற்றும் ஒன்பதா-ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிக்கும் மாணவர்கள், அவற்றை தொடரலாம் அவர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை சேர்த்து, மூன்று மொழிகளை படிக்க வேண்டும் இந்த கல்வி ஆண்டு முதல், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில், 'ஸ்டாண்டர்டு, அட்வான்ஸ்டு' என இரண்டு நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன அனைத்து மாணவர்களும், 80 மதிப்பெண்களுக்கு பொதுவான தேர்வை எழுதுவர் பாடங்களில் கூடுதல் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள், ஆழமான கருத்து புரிதல் மற்றும் உயர்நிலை சிந்தனை திறன்களை சோதிக்க, 'அட்வான்ஸ்டு' தேர்வை எழுதலாம். இந்த முறையின் கீழ், 2028ல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
ஜூன் 30, 2026 20:10

முதல்வர் விஜய் அவர்கள் அரசு இந்த புதிய வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளலாம் என்றுதான் மக்கள் விரும்புகிறார்கள் இதில் ஏழு - எட்டு - ஒன்பது வகுப்பு மாணவர்கள் மட்டும்தான் இதில் அடங்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மானவர்கள் மும்மொழிக்கொலைகையை கடை பிடிக்க வேண்டாம் என்றே கூறிவிட்டனர் இதைத்தான் தமிழகமும் கூறியது வரவேற்றது இதனால் இஷ்ட்டப்பட்டவர்கள் ஏழு - எட்டு - ஒன்பதாம் வகுப்புகளில் ஏதாவது ஒரு இந்திய மொழியையும் எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் கூறியிருக்கிறார்கள் மூன்றாவது மொழி ஹிந்தி என்று எங்குமே யாருமே கூறவில்லை மூன்றாவதுமொழி தெலுங்கு - மலையாளம் - கன்னடம் - ஹிந்தி வங்காளம் - மராட்டி என்று எந்த ஒரு மொழியாகவும் இருக்கலாம் அப்படியிருக்கும்போது இதில் மூண்று மொழி கற்றுக்கொண்டால் என்ன கஷ்டம் வீம்புக்காக திராவிட மாடல் அரசுகூறியதையே திரும்ப திரும்ப கூறக்கூடாது இப்போது உள்ள புதிய அரசு இந்த புதிய மும்மொழி கொள்கையை அமல்படுத்தி அதற்குண்டான மத்திய முழு உதவி பணத்தையும் பெற்று மாணவர்களின் வாழக்கையை உயர்த்திட வழி செய்ய வேண்டும்


புதிய வீடியோ