உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும்; ஈரானுக்கு ஜெய்சங்கர் சொன்ன அறிவுரை!

போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும்; ஈரானுக்கு ஜெய்சங்கர் சொன்ன அறிவுரை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: போர் நிறுத்தம் பதட்டத்தை தணிக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.இஸ்ரேல்- ஈரான் இடையே நிலவி வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உடன் தொலைபேசியில் உரையாடினார். இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: அப்பாஸ் அராக்சி உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார். சர்வதேச சட்ட மீறல்கள் மறறும் அதன் இறையாண்மை மீதான தாக்குதல்களுக்கு ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். போர் நிறுத்தம் பதட்டங்களை தணிக்கும் என வலியுறுத்தினார். ஈரானில் இருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்களை வெளியேற்றுவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதம் நடத்தினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை