உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் புஜாரா ஓய்வு அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் வீரர் செதேஷ்வர் புஜாரா. இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்கள், 35 அரைசதங்கள் உட்பட 7,195 ரன்கள் எடுத்துள்ளார். 30 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 390 ரன்கள் எடுத்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dkqlq09k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஐபிஎல் போட்டியில் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பங்களிப்பு பல போட்டிகளில் இந்திய அணிக்கு இருந்தாலும், சமீபகாலமாக தேசிய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்தார்.தற்போது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய வீரர் செதேஷ்வர் புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன். நான் இந்திய அணிக்காக விளையாடிய நாட்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எல்லா நல்லா விஷயங்களுக்கும் ஒரு நாள் முடிவு இருக்கும், நன்றி,'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Premanathan S
ஆக 24, 2025 17:18

நாட்டில் ஒரு நாநூறு பேர் தீக்குளிக்க வில்லையா இன்னும்? ஆச்சரியமாயிருக்கிறது நடிகன், கிரிக்கெட் வீரன், கட்சித்தலைவன் போனால் இது அவசியம்


Vasan
ஆக 24, 2025 12:34

Pujara was considered as Wall, similar to Dravid. Cant forget his innings and saving India from defeat on several occasions.


ஆரூர் ரங்
ஆக 24, 2025 11:59

கிரிக்கெட் திடல்கள் நமது உள்நாட்டு விளையாட்டுகளுக்கான அரங்கங்களாக மாற்றப்பட வேண்டும். கிரிகெட் விளையாட்டு காலனி அடிமைத்தனத்தின் அடையாளம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை