உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் செய்த தவறால் நாட்டுக்கே அச்சுறுத்தல்: பிரதமர் மோடி சாடல்

காங்கிரஸ் செய்த தவறால் நாட்டுக்கே அச்சுறுத்தல்: பிரதமர் மோடி சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோக்ரஜார்: காங்கிரஸ் செய்த பாவத்தால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.அசாமில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்துக்கு சென்ற பிரதமர் மோடி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: போடோலாந்து மக்களை பல தலைமுறைகளாக மாயக்கனவுகளில் காங்கிரஸ் சிக்க வைத்தது. தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களுக்கு இடையே காங்கிரஸ் பிளவை விதைத்தது. ஆனால், அமைதியை நிலைநாட்ட பாஜ பணியாற்றியது. இதன் காரணமாக போடோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b0vvejqm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, அனைத்து முக்கிய அமைப்புகளும், குழுக்களும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்துள்ளன.பொய் வாக்குறுதிகளை விற்கும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் காங்கிரசிடம் எப்போதும் இருந்தது இல்லை.காங்கிரஸ் கட்சி மற்றொரு பாவம் செய்துள்ளது. அதில் ஒன்று நாட்டுக்கும், அசாமின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், மகள்கள் மற்றும் நிலம் ஆகியவற்றின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.ஊடுருவல்காரர்களுக்கு எப்போதும் அக்கட்சி ஆதரவு அளித்து வந்துள்ளது. பல தசாப்தங்களாக இப்பகுதியின் பூர்வகுடி மக்களுக்கு நிலம் குறித்த அடிப்படை சட்ட ஆவணங்களை காங்கிரஸ் வழங்க மறுத்துவந்ததுடன், பழங்குடியினரின் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தது. துப்ரி மற்றும் கோல்புரா பகுதிகளில் நிலைமை மோசமாக இருந்தது. இதனால், போடோலாந்து பகுதியில் மக்கள் தொகையில் சமநிலை சீர்குலைந்து பெரும் நெருக்கடி சூழ்நிலை ஏற்பட்டது. பாஜ அரசு, தற்போது ஊடுருவல்காரர்களிடம் இருந்து நிலங்களை பெற்று பூர்வகுடி மக்களிடம் ஒப்படைத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mariadoss E
மார் 13, 2026 21:44

இன்னும் எவ்வளவு நாள் தான் இதே......


Chinnappan Arulappan
மார் 13, 2026 22:32

வேறு வழி???


R k Ramanathan
மார் 13, 2026 19:35

60 ஆண்டுகளுக்கு சேர்த்து வைத்த மொத்த தவறுகளை வளர்த்து விட்டு அதை சரி செய்ய வேண்டிய அளவிற்கு தடவை கொடுத்தால் அந்த கழிவுகளை அழித்து முழுமையாக ஓழிக்க முடியம் இது நியாயமா?


Farmer
மார் 13, 2026 19:26

he has nothing to say other than blaming Congress... been doing this for the last 12 years and it's getting very boring... if you cannot fix issues just leave to the next guy.... unfit for action


veera
மார் 13, 2026 19:44

fake farmer better go for begging in pakistan


vivek
மார் 13, 2026 19:46

pakistan farmer always begging


Nathansamwi
மார் 13, 2026 21:19

Well said ...he just blaming congress during election rather than what his party did to the people ....


vivek
மார் 13, 2026 22:18

nathanswami just got from coma..so not remembering old things


Nathansamwi
மார் 14, 2026 02:53

Vivek lets wait for the tn election results...it clearly shows what is the level of bjp in tamilnadu.....they wouldnt cross 2% of the total votes ....


vivek
மார் 14, 2026 05:50

yes nathan as we can see you waiting in the queue for RS 3000 and fate for Tamil Nadu will continue


vivek
மார் 14, 2026 05:52

it is not for bjp to win. some half cooked brains could not understand. hope you understand


vivek
மார் 14, 2026 05:55

yes as long as people like you go behind freebies, it is difficult to get true positive result


vivek
மார் 13, 2026 19:17

மறுபடியும் முதலில் இருந்தா?


கனோஜ் ஆங்ரே
மார் 13, 2026 18:52

சரிண்ணே வச்சிக்குவோம்... அவன் தவறு செய்தான்னே வச்சிக்குவோம்... அதான் நாங்க அவனை அடிச்சு விரட்டி 12 வருஷமாச்சே.....


J.Isaac
மார் 13, 2026 20:31

இப்படியெல்லாம் கேள்வி கேட்பீர்கள் என்று தான் சாமானியர்கள் கல்வி பெறக்கூடாது என்கிறோம்


ஆகுயர்த்தோன்
மார் 13, 2026 18:41

காங்கிரஸ் ஏன் காஸ் கோடௌன் கட்டி வைக்க விலை நல்ல காலம் காந்தி நேரு அமர் அக்பர் அந்தோணி என்று போகாமல் விட்டாரே என்று சந்தோசப்படுவோம்


GMM
மார் 13, 2026 18:20

ஊடுருவல்=அமைதி மார்க்கம். மொத்தமாக குடியேறியவர்கள். தேர்தல் வாக்கு வங்கி உருவாக்குவார்கள். வளங்கள் கைப்பற்ற கோரிக்கை வைப்பார்கள். காங்கிரஸ் போன்ற கொள்ளை கூட்டம் முதல் ஆளாக வாக்குறுதி தரும். வென்ற பின் ஆக்கிரமித்து காஷ்மீர் போல் தன்வசம் படுத்தி விடுவார்கள்.


P. SRINIVASAN
மார் 13, 2026 17:55

12 வருசமா இதே பாட்டு பாடுங்க... நீங்க என்ன சாதிச்சீங்க?


ரவீந்திரன்
மார் 13, 2026 18:11

இதற்கு மேல் இனி என்ன செய்ய வேண்டும். நாடு முன்னேற்றப் பாதையில் தெளிவாக செல்கிறது


பேசும் தமிழன்
மார் 13, 2026 18:16

.. கான் கிராஸ் கட்சி பழங்குடியினர் நிலங்களை ஊடுருவல் ஆட்களிடம் கொடுத்து விட்டார்கள்.... அதனை திரும்ப பெற்று.... பழங்குடியினரிடம் பிஜேபி அரசு ஒப்படைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.... முதலில் நன்றாக படியுங்கள்.... பிறகு கருத்து எழுதலாம்.


vivek
மார் 13, 2026 19:41

நிறைய டாஸ்மாக் கடை திருந்து இருக்கோம்...குடும்பத்தோட ஓடி வாங்க


Chinnappan Arulappan
மார் 13, 2026 22:31

உலக டூர் சாதனை இல்லையா??