உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 20 ஆண்டுகள் பழைய விமானங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு..

20 ஆண்டுகள் பழைய விமானங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடிவு..

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சர்வதேச அளவில் விமானங்களை வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், 20 ஆண்டுகள் வரை பழமையான விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க, டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.இந்திய விமான நிறுவனங்கள் சமீபகாலமாக தங்களது வணிகத்தை விரிவுபடுத்தி வருகின்றன. மேலும், 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளன. உலகளாவிய வினியோகத் தொடர் சிக்கல்களால், விமானங்கள் கிடைப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.இதை சமாளிக்க, சில விமான நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, 18 ஆண்டுகள் வரை பழமையான அழுத்தம் உடைய விமானங்களை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.இதை, 20 ஆண்டுகளாக அதிகரிக்க டி.ஜி.சி.ஏ., திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, டி.ஜி.சி.ஏ., மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனி விமானம், பொது போக்குவரத்து மற்றும் பிற செயல்பாடுகளுக்கான விமானங்களை இறக்குமதி செய்ய, வரைவு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. முன்னர், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, 18 ஆண்டுகள் வரை பழமையான அழுத்தம் உடைய விமானங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.இதை, 20 ஆண்டுகளாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. அதே போல, 20 ஆண்டுகளுக்கு பதில், 25 ஆண்டுகள் வரை அழுத்தமற்ற விமானங்களை இறக்குமதி செய்யலாம்.பயணியர் சேவை மற்றும் பொது விமானப் போக்குவரத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் அழுத்தம் உடைய விமானங்கள், 20 ஆண்டுகள் பழமையானதாகவோ அல்லது வடிவமைக்கப்பட்டதில் இருந்து 65 சதவீத கால பயன்பாட்டை நிறைவு செய்திருக்கவோ கூடாது.அழுத்தமற்ற விமானங்களை பொறுத்தவரை, கடந்த ஆறு மாதங்களில் 50 மணி நேரம் பறந்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Thirumal Kumaresan
செப் 06, 2025 14:25

மேக் இந்த இந்தியாவில் தயாரிக்க முயற்சி எடுக்க வேண்டும். வாங்குவது அதிகமாக புத்தம் புதியதாக இருப்பதே சிறப்பு .


Tetra
செப் 06, 2025 17:10

இங்கதான்நீங்கஎதுக்குமே நிலம்தர மறுக்கிறீர்கள் ஏ. விவசாயி என்ற பெயரில் டெல்லி சாலையில் நிர்வாணமாக ஓடுறீங்களே.


Tamilan
செப் 06, 2025 14:03

300 பேர் பலியானபின்பும், உலகிலேயே நான்காவது ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று பிதற்றிக்கொண்டு இப்படி ஒரு விமானம் தேவையா?. ராவணனை இந்தியா அழைத்துவந்து தாமாகவே சீதையை ஒப்படைப்பதற்கு சமம்.


ஆரூர் ரங்
செப் 06, 2025 11:16

உலகமே சந்தித்து வரும் பிரச்சனைதான். என்ஜின் பிரச்சினைகள் காரணமாக போயிங் விமான சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. எம்பரர் குறைந்த தூரப் பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஏர்பஸ் நிறுவனத்திலும் உற்பத்தியில் சுணக்கம். மிக நீண்ட ஆர்டர் புத்தகத்தை வைத்துள்ளது. விமானங்களை லீஸ்க்கு தரும் நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் எதிர்பார்க்கின்றன. சரியாக சர்வீஸ் செய்து வைத்திருந்தால் 30 35 ஆண்டுவரை கூட பாதுகாப்பாக பயன்படுத்தலாம். ஏர்லைன்ஸ் துறையின் கஷ்டகாலம்.


அப்பாவி
செப் 06, 2025 07:22

துருக்கி ரெடியா இருக்கு...


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 06:14

காயலான் கடைக்கு போய் வாங்கிட்டு வரலாமாம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 06, 2025 06:13

போகப் போறது நம்ம உசுரு தானே, ஜீ கிட்டே தான் புத்தம்புது Rajdoot 737 இருக்கே