உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

இந்தியாவில் நிற்கும் பிரிட்டீஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் போர் விமானத்துக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.பழுது பார்ப்பதற்காக, இங்கிலாந்தில் இருந்து 40 பேர் கொண்ட நிபுணர் குழு விரைவில் வருகின்றனர்.பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து புறப்பட்ட 'எப் -35' ரக போர் விமானம், கடந்த 14ம் தேதி அரபிக் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. கடற்கொள்ளையர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் அமைதியின்மையை கருத்தில் கொண்டும், இந்த கண்காணிப்பு பணியை பிரிட்டீஷ் கடற்படை செய்து வருகிறது.இதற்கென கிளம்பிய போர் விமானம், நீண்ட நேரம் கண்காணிப்பு பணியில் இருந்த காரணத்தால் எரிபொருள் வெகுவாக குறைந்து விட்டது. இருக்கும் எரிபொருளை கொண்டு, மீண்டும் போர் கப்பலுக்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த விமானி அருகில் உள்ள விமான நிலையத்தை தேடினார்.திருவனந்தபுரம் விமான நிலையம் அருகில் இருப்பதை உணர்ந்து மத்திய அரசு அனுமதியுடன் விமானம் அங்கு தரையிறங்கியது. பிரிட்டீஷ் கடற்படை வேண்டுகோள்படி அந்த விமானத்துக்கு எரிபொருளும் வழங்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிய நிலையில், அந்த விமானத்தை விமானி கிளப்பினார். கிளப்பிய உடனே, விமானத்தில் தொழில்நுட்பக்கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார்.உடனடியாக விமானம் பறக்கும் முடிவை கைவிட்டு, பிரிட்டீஷ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பராமரிப்பு குழுவினர் வந்து பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை சரி செய்ய முடியவில்லை. விமானத்துக்கு, 24 மணி நேரமும், சி.ஐ.எஸ்.எப்., படையினர் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், விமானத்திற்கான பார்க்கிங் கட்டணங்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் செலுத்த வேண்டும் என்பதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் தொகையை அரசாங்கமே முடிவு செய்யும். தொழில்நுட்ப கோளாறால், கட்டணம் செலுத்தும் நிலை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.விமானத்தை பழுதுபார்ப்பதற்காக இங்கிலாந்திலிருந்து 40 பேர் கொண்ட நிபுணர் குழு விரைவில் வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்மரமாக நடந்து வருகிறது.அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த போர் விமானத்தின் சர்வதேச விலை மதிப்பு 640 கோடி ரூபாய். உலகில் மிகக் குறைந்த நாடுகளிடம் மட்டுமே இந்த விமானம் இருப்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Thameem Ansar
ஜூன் 26, 2025 18:23

திருவனந்தபுரம் விமான நிலையம் அண்டர் அதானி குரூப்


sasikumaren
ஜூன் 26, 2025 07:10

அமெரிக்க இங்கிலாந்து இந்தியா மீது ஏதோவொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது கேரளா துறைமுகத்தில் ஏதோ ஒரு பொருள் தயாரிப்பு நடக்கிறது அதை தடுத்து நிறுத்த இரண்டு பெரிய சரக்கு கப்பல்களின் ஏதோ விபத்து நடத்து போல நடத்தி உள்ளது பிறகு இன்னும் ஏதோ தேடுதல் வேட்டையில் சந்தேக கண்ணோடு அலைந்து வருகின்றன இந்தியாவின் அதி நவீன பாதுகாப்பு அம்சங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது இப்போது தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் ஜெய் ஹிந்து


Jagan (Proud Sangi )
ஜூன் 26, 2025 00:31

இந்தியா லாக் எல்லாம் ஒண்ணும் இல்ல. இந்திய கடற்படையுடன் சேர்ந்து கூட்டு பயிற்சி தான் இது. And now the British High Commission in Bengaluru has responded to a question d also issued a statement on this subject. The advanced fifth-generation fighter - part of the Prince of Wales Carrier Strike Group deployed to the Indo-Pacific - was returning to its base after completing joint maritime exercises with the Indian Navy when it made an emergency landing at Thiruvananthapuram.


sankaranarayanan
ஜூன் 25, 2025 19:39

பார்க்கிங் கட்டணத்திற்கு பதிலாக இந்த விமானத்தையே நமக்கு பரிசாக அளித்துவிடலாம்


Mahendran Puru
ஜூன் 25, 2025 19:12

சில நூற்றாண்டுகள் நம் நாட்டை சுரண்டியவர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில் தவறில்லை.


Godfather_Senior
ஜூன் 25, 2025 18:22

வேவு பார்க்க வந்தார்களா, இல்லே வேறு எதற்கும் வந்தார்களோ தெரியாது ஆனால் வசமா நம்ம சாட்டிலைட் கண்காணிப்பில் மாட்டிக்கிட்டாங்க. 40 பேர் என்ன, 400 இன்ஜினீயர் வந்தாலும் அது கிளம்பாது. ஆமாம், நம்ப இந்திய என்ஜினீயர்கள் நாற்பதே நிமிஷத்தில் அதை பறக்கவைக்க முடியும். அதுதான் நம்ம என்ஜினீயர்களுக்கு மட்டுமே தெரிந்த "Satellite Unlock" tem code


Jagan (Proud Sangi )
ஜூன் 25, 2025 19:20

ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. வாட்சப்பில இப்பிடி ஏதோ லாக் போட்டுட்டாங்க என்று ஒரு உளறல் சுற்றிக்கொண்டிருக்கு. பசிபிக் பயிற்சிக்கு போகும் போதே திருவந்திபுரம் ஒரு Recovery Airport என்று இந்தியாவிடம் விண்ணப்பித்து அனுமதியும் பெற்றுவிட்டார்கள் 8 மாதம் முன்பே. இப்போ இருப்பது ஹைட்ராலிக் பிரச்னை. அமெரிக்க ஈரான் போரில் இருந்தால் உதிரிபாகம் வரவில்லை, வந்தவுடன் புறப்படும். சீனாவின் H20 stealth bomber சொல்லாம கொள்ளாம இந்தியாமேல தான் பிரீயா சுத்துறான் முடிஞ்சா லாக் போடுங்க பாப்போம் ????


rama adhavan
ஜூன் 25, 2025 18:07

பார்க்கிங் கட்டணம் வேண்டாம். இதனால் கெட்ட பேர் தான் கிடைக்கும்.


Sankaran Natarajan
ஜூன் 25, 2025 19:27

சரியான கருத்து.


Jack
ஜூன் 26, 2025 09:39

பேரிச்சம்பழம் எடைக்கு எடை ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை