உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

 பட்டப்படிப்பு சான்றிதழ்: யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்காத கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, உயர்கல்வி நிறுவனங்களை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது. நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில், செமஸ்டர் தேர்வுகள் முடிந்து, மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்குவதில், பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வருகின்றன. இது, மாணவ - மாணவியரின் வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான, 180 நாட்களுக்குள், பட்டப்படிப்பு சான்றிதழ்களை, மாணவ - மாணவியருக்கு வழங்க வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்களை, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது. இதுகுறித்து, யு.ஜி.சி.,யின் செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலை களுக்கு அனுப்பிஉள்ள கடிதம்: நாட்டில் சில உயர்கல்வி நிறுவனங்கள், உரிய காலக்கட்டத்துக்குள், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதில்லை. பட்டப்படிப்பு சான்றிதழ்களை வினியோகிப்பதில்லை என, புகார்கள் வந்துள்ளன. இது போன்ற தாமதங்கள், மாணவ - மாணவியர் தகுதியான வேலை வாய்ப்புகளை பெற தடையாக உள்ளன. அவர்களின் உயர்கல்விக்கும் இடையூறாக உள்ளது. யு.ஜி.சி., சட்ட விதியின்படி, மாணவ - மாணவியர் பட்டம் பெற தகுதி பெற்ற 180 நாட்களுக்குள், அவர்களுக்கு பட்டங்களை வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால அட்டவணையின்படி, செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத, உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியருக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை, தாமதமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சிந்தனை
டிச 01, 2025 09:20

இதுபோன்ற பிழைகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை நீதித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் மீறி இப்படி பிழை நடந்தால் நீதித்துறையில் உள்ளவர்களுக்கே முதலில் தண்டனை கொடுத்து விட வேண்டும் பிறகுதான் விசாரணை நடத்தப்பட வேண்டும் அப்படி ஒரு சட்டம் நாட்டுக்கு தேவைப்படுகிறது இல்லையென்றால் இந்த நீதிபதிகள் சம்பளம் வாங்கிக் கொண்டு தீர்ப்புகளை மட்டும் கொட்டிக் கொண்டே இருக்கிறார்கள் இது பலன் அற்றதாக இருக்கிறது ஆனால் நீதித்துறை பொறுப்பு ஏற்க வேண்டும் அதுதான் சரியாக இருக்கும் இல்லையென்றால் நாட்டில் உள்ள எல்லோரும் தம்மை நீதிபதிகளாக கருதிக்கொண்டு பொறுப்பாற்றவார்களாக ஆகிறார்கள் நீதிமன்றத்திற்கு அதிக அதிகாரம் இருப்பது உண்மை என்றால் அதிக கடமை உணர்ச்சிகளும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டுமே இதில் என்ன தவறு இருக்கிறது


ஜெய்ஹிந்த்புரம்
டிச 01, 2025 09:04

ஒரு சர்டிபிகேட் இன்னமும் வரல


ஜெய்ஹிந்த்புரம்
டிச 01, 2025 09:04

ஒரு சர்டிபிகேட் இன்னமும் வரல


Saamaanyan
டிச 01, 2025 08:27

180 நாட்கள் என்பது இந்த நவீன தெழில்நுட்ப காலத்தில் கூடவா ? 60 நாட்களே போதுமானது ...


Indian
டிச 01, 2025 05:03

I am not satisfied with how my comments are handled on Dinamalar. I have shared several truthful comments based on real experiences, without pointing fingers at anyone, but they were not published. These comments were meant to highlight genuine issues, yet they were not approved for the comment section.


Indian
டிச 01, 2025 04:58

Many of the universities not issue convocation, it hits job opportunity.


சிட்டுக்குருவி
டிச 01, 2025 04:58

சட்டங்கள் இயற்றுவதும் அதை சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது மக்கள் தெரிந்து பின்பற்றுவது அவர்களுடைய கடமைகளில் முக்கியமானது .அதைப்பின்பற்ற வில்லையென்றால் அதனுடைய விளைவு என்ன என்பதை அந்த சட்டத்திலேயே குறிப்பிட்டு இருக்கும் பட்சத்தில் எச்சரிக்கை எதற்கு? முதல் நடவடிக்கை எடுத்தால் மற்றவர் எல்லோரும் கட்டாயம் பின்பற்றுவார்கள் .நடவடிக்கை எடுங்கள் .


Kasimani Baskaran
டிச 01, 2025 03:53

நவீன யுகத்தில் கூட அரை ஆண்டு என்பது ஆமை வேகத்தை விட குறைவான வேகத்தில் வேலை செய்வதை காட்டுகிறது.


சமீபத்திய செய்தி