உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதே அடி... அதே தோல்வி... பரிதாப நிலையில் டில்லி காங்கிரஸ்

அதே அடி... அதே தோல்வி... பரிதாப நிலையில் டில்லி காங்கிரஸ்

புதுடில்லி; டில்லி சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. தேசிய அரசியலில் தலைநகர் டில்லி ஒரு முக்கிய கேந்திரம். தலைநகர் அரசியல் மற்றும் அரியணை என்பது மற்ற மாநிலங்களிலும் தனித்துவம் மிக்க ஒன்று. அப்படிப்பட்ட சிறப்பு மற்றும் எதிர்பார்ப்புமிக்க தலைநகர் டில்லியில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wa6jv4z5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் முடிவுகளில் பா.ஜ.,அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் ஆட்சியை பிடிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஆம் ஆத்மி இருந்தாலும் அரியணையை பறிகொடுத்துள்ளது. தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ., இடையே தான் போட்டி என்பது ஓட்டுப்பதிவுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தெரிந்துவிட்டது. டில்லி தேர்தலில் இம்முறை மும்முனை போட்டி என்றாலும் மெகா யுத்தம் என்பது ஆம் ஆத்மிக்கும், பா.ஜ.,வுக்குமே என்று தொடக்கம் முதலே அரசியல் விமர்சகர்கள் கூறி வந்தனர். அதை மெய்ப்பிக்கும் விதமாகவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் இருந்தன. ஓட்டுப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில் காங்கிரஸ் நிலை படுபாதாளத்தில் உள்ளது. தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்து கட்சியின் இருப்பு இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் காங்கிரஸ் பின்தங்கி இருக்கிறது. பின்தங்கியது என்பதை விட ஒட்டுமொத்தமாகவே காணாமல் போய் விட்டது. 2025 தேர்தல் மட்டும் அல்லாமல் 2015 மற்றும் 2020 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி என்பது பூஜ்யம்.தற்போது பத்லி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளரான மாநில தலைவர் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்தார். பின்னர் சற்றுகள் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க 3ம் இடத்திற்குபின்னுக்கு தள்ளப்பட்டார்.. தொடர்ந்து 3வது முறையாக சட்டசபை தேர்தலில் மெகா தோல்வியை சந்தித்துள்ள காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை தற்போதைய முடிவுகள் அளித்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

Ray
பிப் 09, 2025 16:53

ஒரு சீட்டாவது வந்துதா


vbs manian
பிப் 08, 2025 18:15

காலியான பெருங்காய டப்பா.


nv
பிப் 08, 2025 16:39

ஒத்துக்க மாட்டேன்.... தேர்தல் commission EVM இல் கை பட்டநை அழுத்தினால் தாமரைக்கு விழ வைத்து விட்டனர்.. அம்மா, அக்கா எல்லாம் வாங்க, இந்த அநியாயத்தை கேளுங்க, நண்பா ஸ்டாலின், மம்தா திதி, அகிலேஷ் அண்ணா எல்லாம் நாளைக்கு வந்து பாரளுமன்றத்தில் முடக்கி கேள்வி கேக்கணும்...


G SRIDHARAN
பிப் 08, 2025 16:20

பல தேசப்பற்றுள்ள தலைவர்களை தன்னகத்தே கொண்டிருந்த காங்கிரஸ் ஒரு காலத்தில் ஒரு குடும்பத்திற்கு விசுவாசமாக,தெளிவான,தேசநலனைக்கொண்டு செயல்படாத தலைவர்களை தற்பொழுது கொண்டு,தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது .இது வருத்தப்படவில்லை ஒன்று. தேச நலனும்,தேச மக்களின் நலமும் முக்கியம் என்ற நிலைப்பாடு செயல்பட்டால்,காங்கிரஸுக்கு நல்லது.ஆனால் அப்படி செயல்படுவார்கள் எனத் தோன்றவில்லை. வலுவான ஜனநாயகத்திற்கு வலுவான தேசப்பற்றுள்ள எதிர்கட்சி நிச்சயம் தேவை.


Srinivasan Krishnamoorthy
பிப் 08, 2025 16:46

dont say congress. It is indira congress who broke from the original congress. This is only a dynasty party always claiming credit from gandhi. NO useful contribution to this country. Remember Indira gandhi and DMK defeated Kamaraj ?Old congress. Indira gandhi imprisoned old congress leaders like Morarji during emergency. Now closing steps are done by grand children pappu and co


prasath
பிப் 08, 2025 16:00

நேரு குடும்ப வாரிசுகள் என்னைக்கு காங்கிரஸ் கட்சியை விட்டு நிரந்தரமாக விஆர்ஸ் வாங்குகிறதோ, அப்போது தான் அக்கட்சிக்கு பல இடங்களில் டெபாசிட் தேறும் இது தான் பல மாநில தேர்தல் சொல்லும் முடிவுகள்.


RAKKUPANDIAN
பிப் 08, 2025 15:37

ராகுலுக்கு முதலில் பிஜேபி நன்றி கூறவும்


theruvasagan
பிப் 08, 2025 14:53

கவுல் பிராமணர் கான்கிராசுக்கு காரியம் பண்ணாமல் போகமாட்டார்.


jss
பிப் 08, 2025 16:44

அப்படியே ஆகட்டும், ததாஸ்த்து, ஆமேன்


Sundaran
பிப் 08, 2025 14:51

கோமாளி தலைவர்களையும் கொள்ளை கூட்டத்தையும் வைத்துக்கொண்டு காங்கிரஸ் வெற்றி பெறுவது முடியாது. காந்தி சொன்னது போலவே கட்சியை கலைத்து விட வேண்டியது தான்


jss
பிப் 08, 2025 16:47

சரியான குசும்புக்கார தாத்தா காந்தி. அவ.ரே கலைத்து விட்டு போயிருக்க வளண்டியதுதினே. இதில் என்ன கலைத்து விடச் சொன்னார் என இப்போது சொல்வது


Rajarajan
பிப் 08, 2025 14:49

நான் தான் காங்கிரஸ்னு ஒன்னு இல்லனு சொல்லிட்டு இருக்கேன். இவங்க தான் வம்படியா, இருக்குன்னு சொல்லி அசிங்கப்படறாங்க. இதைவெச்சி, தமிழ்நாட்டுல காங்கிரஸ்க்கு ஒற்றை இலக்கம் தான் சீட்டு கிடைக்கும் தி.மு.க. கிட்ட.


Kumar Kumzi
பிப் 08, 2025 14:42

பப்பூ இருக்கும் வரை கொங்கிரெஸ்சின் அழிவை யாராலும் தடுக்க முடியாது