உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்: டில்லி ஐகோர்ட்

புதுடில்லி : குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டச் சிக்கல்கள் மற்றும் குற்றவியல் அம்சங்களில் முஸ்லிம் மற்றும் இந்திய தண்டனை சட்டங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய டில்லி உயர் நீதிமன்றம், 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இது சரியான நேரம்' என கருத்து தெரிவித்துள்ளது. திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவற்றில் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி வரும் நிலையில், அவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே வழிமுறையை பின்பற்ற, பொது சிவில் சட்டம் வழி வகை செய்கிறது. உத்தரவு இதை, நாடு முழுதும் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம், கடந்த ஜனவரி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் 14 வயதாக இருக்கும்போது, அவரின் வளர்ப்பு தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில், அவர் கர்ப்பமானார். பிறந்த குழந்தையும் தத்து கொடுக்கப்பட்டது. இதற்கிடையே, அச்சிறுமியை ஹமீத் ராஜா என்ற இளைஞர் காதலித்தார். பின், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த சூழலில், தன் மகளை, அவரது கணவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக வளர்ப்பு தந்தை புகார் அளித்ததை அடுத்து, ஹமீத் ராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனக்கு ஜாமின் வழங்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனு, டில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மோங்கா முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம் சட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட பருவமடைந்த சிறுமியர் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறப் படுகிறது. ஆனால் இந்திய குற்றவியல் சட்டம், அத்தகைய திருமணங்களில் கணவரை குற்றவாளி ஆக்குகின்றன. ஜாமின் இது, ஒரு கடுமையான குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த விஷயத்தில் சட்டத் தெளிவு மிகவும் அவசியமாகிறது. எனவே, சீரான பொது சிவில் சட்டத்தை நோக்கி நகர வேண்டிய நேரம் இதுவல்லவா? அதை எதிர்ப்பவர்கள், மதச் சுதந்திரம் பறிபோகும் என்று எச்சரிப்பது உண்மை தான். அதேசமயம், இந்திய அரசியலமைப்பு சட்டம் அடிப்படை உரிமையை குடிமக்களுக்கு உறுதி செய்துள்ளது. இருப்பினும், தனிநபர்களை குற்றவாளியாக்கும் நடைமுறைகளுக்கு மதச் சுதந்திரம் பொருந்தாது. இதை கருத்தில் கொண்டு, இந்த வழக்கில் மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பேசும் தமிழன்
செப் 27, 2025 09:16

பொது சிவில் சட்டம் கண்டிப்பாக வேண்டும்.... இந்திய சட்டத்தை மதித்து இருப்பதானால்..... இந்தியாவில் இருக்கலாம்....நாடு முக்கியமில்லை மதம் தான் முக்கியம் என்றால்.... அந்த மதம் சார்ந்த நாட்டுக்கு போய் விடலாம்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 26, 2025 20:35

தேசத்தில் தான் மதம் இருக்க முடியுமே தவிர மதத்தில் தேசமில்லை..... தேசத்தால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு எல்லா மதமும், ஜாதியும், இனமும், மொழியும் கட்டுபடவேண்டும் என்று அறிவிப்பதற்கு பதில் ஏனிந்த வழவழ கொழகொழ..... சுதந்திரம் பெற்றதிலிருந்தே இஸ்லாமியருக்கு எதிராக அமையும் கருத்தானாலும் தீர்ப்பானாலும் சொல்வதற்கு ஏனிந்த தயக்கம் மென்மை..... தீர்ப்பு என்றால் ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் தான் இருக்க முடியும்.....தேச நலனை கருத்தில் கொண்டு புதியதாக சட்டம் இயற்றினால் சட்டத்தை மீறுபவர்களுக்கு தான் தண்டனை .... சிறுபான்மையினரை மனதில் வைத்து சட்டமே வேண்டாம் என்றால் நாடு என்ன கதியாகும்....நிகழ் காலத்திற்கு ஒத்து வராத காலாவதியான சட்டங்கள் காசுக்கு விலைபோன நீதிமன்றங்கள்.....இதில் மக்களின் தனியுரிமை, சுதந்திரம் காப்பாற்ற படவேண்டுமாம் கேட்டால் இந்தியா ஜனநாயக நாடாம்.....!!!


M S RAGHUNATHAN
செப் 26, 2025 19:20

அரசு பொது சிவில் சட்டம்.கொண்டுவந்தால் உச்ச நீதிமன்றம் தனது உச்ச தனி அதிகாரத்தை பயன்படுத்தி மோடி சிறுபான்மையினரை ஒடுக்க கொண்டுவந்த சட்டம் . இது செல்லாது என்று தீர்ப்பு கொடுப்பார்கள்.


jothi.n
செப் 26, 2025 19:20

பொது சிவில் சட்டம் வேண்டாம் என்று ஒரு குத்து மறைமுக பார்வைக்கு பொது சிவில் சட்டம் வேண்டும் என்று ஒரு குத்து ஆக மொத்தம் நீதிமன்றம் இரண்டு குத்து.


RAMESH KUMAR R V
செப் 26, 2025 19:04

சிவில் சட்டம் காலத்தின் காட்டாயம்


GMM
செப் 26, 2025 18:43

தனிப்பட்ட மற்றும் மரபு சார்ந்த சாதி, மத, மொழி தீர்வு ஒரு குழுவின் பஞ்சாயத்து. அது எப்போதும் சட்டம் ஆகாது. ஒரு நாட்டின் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். அரசியல் சாசன பாதுகாவலர்கள் தான் விடை சொல்ல வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 26, 2025 18:32

வலிய வீட்டுக்கு சிலிண்டர் பார்சல் கேட்கிறார் .


Sundar R
செப் 26, 2025 17:56

WHY UNIFORM CIVIL CODE SHOULD BE IMPLEMENTED IMMEDIATELY IN BHARAT? Many or almost no one here would know — it is the Britishers who coined the law for our nation that Hindus can’t have more than one wife. Eventhough Muslims are our friends, in the second most populous country in the world i.e., our Bharat, the lawmakers should not have been so considerate in those days, that our Muslim brothers can marry four women at a time and produce countless number of children. Around the 1950s or even 1960s, lots of Hindu men had two or more wives to propagate their families. The term “legal” is just to please some one in red coat who lived a thousand miles away from our Bharat and the slave mentality of our Indians is still upholding this British law. We therefore need UCC immediately.


Ravichandran Shanmugamramasamy
செப் 26, 2025 18:41

மதச்சார்பற்ற நாட்டில் அனைவருக்கும் சமமான சட்டங்கள் இருக்க வேண்டும், இதுவே பொது சிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.தனிநபர்களின் உரிமைகளைப் பாதிக்கும் பழைய மற்றும் வழக்கமான சட்டங்களை நீக்கி, நவீன மற்றும் சமத்துவமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.


சமீபத்திய செய்தி