உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் வங்கதேசத்தினர் 66 பேர் கைது: நாடு கடத்தும் பணி தீவிரம்

டில்லியில் வங்கதேசத்தினர் 66 பேர் கைது: நாடு கடத்தும் பணி தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 66 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள், டில்லியில் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, வடமேற்கு டில்லியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினரை போலீசார் கண்டறிந்தனர்.அவர்களது ஆவணங்களை போலீசார் சரி பார்த்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தினர் 66 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது என வங்கதேச அதிகாரிகள் தெரிவித்தனர்.அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்து விசா மற்றும் குடியேற்ற விதிமுறைகளை மீறி வாழ்ந்து வந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V Venkatachalam
ஜூன் 08, 2025 18:50

எனக்கு ரொம்ப வருத்தம். இத்தனை நாடு கடத்தும் செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அதில் தமிழ் நாடு பெயர் காணவே காணோம். மம்மூதா டிடிக்கு அடுத்த படியா தமிழ்நாடு தானே இருக்கு. அப்புறம் ஏன் ஒருத்தனையும் இதுவரை புடிக்கலை. எங்கேயோ இடிக்குதே.


சிந்தனை
ஜூன் 08, 2025 17:01

அதே செலவில் தமிழ்நாட்டில் தேடி இருந்தால் ஆறு லட்சம் பேர் கிடைத்திருப்பார்கள்


Kumar Kumzi
ஜூன் 08, 2025 14:44

உதைத்து விரட்டுங்கள்


Siva Balan
ஜூன் 08, 2025 13:30

சென்னையில் மாட்டுமே பல ஆயிரம் வங்கதேசத்தினர் திமுக அனுதாபிகள் நடத்தும் ஹோட்டல்களில் வேலை செய்கின்றனர். அவர்கள் திமுக ஓட்டு வங்கியாகவே மாறிவிட்டனர்.


Naga Subramanian
ஜூன் 08, 2025 12:42

அமெரிக்க செய்த முறையிலேயே , இந்தியாவும் செய்ய வேண்டும். கை காலில் விலங்கிட்டு நாடு கடத்த வேண்டும். அநேகமாக தமிழகத்தில்தான் அதிகமாக சட்ட விரோதமாக ஊடுருவியுள்ளனர் என்றே நினைக்கிறேன். சென்னையில், நான் தமிழில் பேசுவதையே அநேகமாக நிறுத்தி, ஹிந்தியில் பேசும்படியாகத்தான் உள்ளது. எங்கு சென்றாலும், மற்ற பிராந்தியத்திலிருந்து வந்தவர்கள்தான் உள்ளனர். அதில், யார் இந்தியர் யார் மற்ற நாட்டினர் என்பதே புரிந்துகொள்ள முடியவில்லை.


Iyer
ஜூன் 08, 2025 18:35

1 சட்டவிரோத பங்களாதேஷிகளும் ரொஹிங்கியாக்களும் முதலில் மம்தா பேகத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கு வங்கத்தில் நுழைந்து - RATION CARD + AADHAR CARD + VOTER ID பெற்றுக்கொள்கின்றனர் . 2 அங்கிருந்து அவர்கள் எல்லா மாநிலங்களுக்கும் பரவுகின்றனர் . 3 எங்கெங்கு தேர்தல் நடக்கிறதோ - தேர்தல் நேரத்தில் அவர்கள் மேற்கு வங்கம், டெல்லி, J&K, கர்நாடக, மஹாராஷ்டிர, தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு சென்று ஓட்டளித்து திரும்புவார். மத்திய அரசு இதை போர்க்கால நடவடிக்கையாக கருதி 2-3 வருடங்களுக்குள் எல்லா சட்டவிரோத ஆட்களையும் இந்தியாவை விட்டு விரட்டவேண்டும்.


vadivelu
ஜூன் 08, 2025 12:40

வங்க தேசத்தினார் டில்லியில் அறுபது என்றால் மேற்கு வங்கத்தில் அறுபது லட்சமாக இருக்கும் .இந்தியாவில் ஆறு கோடிகளுக்கு மேல் இருக்கலாம்.


Ramesh Sargam
ஜூன் 08, 2025 12:24

நான் மேலும் மேலும் கூறுவது என்னவென்றால், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த நம்நாட்டு தேசதுரோகிகளும் நாடு கடத்தப்படவேண்டும்.


Iyer
ஜூன் 08, 2025 11:46

சட்டவிரோத வெளிநாட்டினரை பிடித்து நாடு கடத்துதல் நல்ல நடவடிக்கைதான். ஒன்று நினைவில் இருக்கட்டும். சுமார் 5 கோடி பங்களாதேஷிகள் + ரோஹிங்கியா + பாகிஸ்தானிகள் இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கின்றனர். EMERGENCY சட்டம் கொண்டுவந்து - 2 வருட TARGET செய்து எல்லா 5 கொடியையும் அடையாளம் கண்டு பிறகு நாடு கடத்தவேண்டும். இதைஒரு போர்க்கால நடவடிக்கையாக கருதி செயல் படவேண்டும். THESE ILLEGAL SETTLERS ARE POTENTIAL ENEMIES.


vadivelu
ஜூன் 08, 2025 12:41

these people were purposely planted by vested interests.


Nada Rajan
ஜூன் 08, 2025 11:22

நாடு கடத்த வேண்டும்


புதிய வீடியோ