உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கே.ஒய்.சி., கேட்டு தொந்தரவு செய்யாதீர்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கவர்னர் அறிவுறுத்தல்

கே.ஒய்.சி., கேட்டு தொந்தரவு செய்யாதீர்: வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., கவர்னர் அறிவுறுத்தல்

மும்பை: கே.ஒய்.சி., ஆவணங்களைக் கேட்டு, வாடிக்கையாளர்களை திரும்ப, திரும்ப அழைப்பதை தவிர்க்குமாறு, வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கே.ஒய்.சி., எனப்படும் 'வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்' என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய அவசியமில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=key7d9vz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய தரவு தளத்தில் இருந்து வாடிக்கையாளரின் விபரங்களை வங்கிகள் பெற இயலும். ஆனால், பெரும்பாலான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தங்கள் கிளைகள் அல்லது அலுவலகங்களை, மத்திய தரவு தளத்தில் இருந்து தகவல்களை பெற அனுமதிப்பதில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் இத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.கே.ஒய்.சி., மறுசமர்பிப்பு கோரிக்கைகளால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்த புகார்கள் நாளுக்கு நாள் ரிசர்வ் வங்கிக்கு அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தவிர்க்க, வங்கிகள் தங்களின் குறை தீர்க்கும் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். புகார்களுக்கான தீர்வுகளுக்காக, வங்கியின் நிர்வாக இயக்குனர்கள் முதல் கிளை மேலாளர்கள் வரை, ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இவ்வாறு மல்ஹோத்ரா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
மார் 19, 2025 19:54

வங்கி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவேண்டிய தொந்தரவு கொடுத்தாகி விட்டது. இனி என்ன வலியுறுத்துவது தொந்தரவு செய்யாதீர் என்று.


R.Varadarajan
மார் 19, 2025 17:12

வாடிக்கையாளர்கள் வீட்டு முகவரி மற்றும் விவர்ஙகளில் ஏதேனும் மாற்றம் இருந்தால் சொந்த நலன்களைகாத்துக்கொள்ள சுயமாகவே மாற்ங்களை வங்கி மேலாளரிடம் தெரிவிக்ப்போகிரார்கள், ஏன்வேண்டாத தொல்லைகள் ? இப்போதும்சில வங்கி மேலாளர்கள் நாமினிகளுக்கும கே ஒய் சி கோருவது அவலத்தின்உச்சம்


கோபாலன்
மார் 19, 2025 16:18

குழந்தையை கிள்ளி விட்டு தொட்டில் ஆட்டியது போன்று உள்ளது.எல்லா வங்கிகளுக்கும் சர்குலர் அனுப்பவும்


சுரேஷ்சிங்
மார் 19, 2025 15:45

இதெல்லாம் சாதாரண மக்களுக்குத்தான். பெரிய லெவல்ல ஆட்டையப் போடுறவன் போட்டுக்கிட்டே இருக்கான்


குப்சாமி
மார் 19, 2025 15:43

காசு நாம டெபாசிட் பண்ணுனா வாங்கிக் கொட்டிப்பாங்க. திரும்ப எடுக்கப் போனா முய்ணு தலைமுறை ஆதார், அட்ரஸ், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யோட வயசு எல்லாம் கேப்பாய்ங்க.


S.ஷோபனா
மார் 19, 2025 13:37

முகவரி மாற்றினால் வங்கிக்கு தெரிவுப்பதில்லை. KYC கட்டாயம் தேவை.


theruvasagan
மார் 19, 2025 13:02

கார் வாங்கினபோது குடுத்த பாஸ்ட் டேக்குக்கு மறுபடியும் கேஒய்சி குடுக்கணும்னு ஒரே டார்ச்சர். அதுவும் வீடியோ கால் மூலமாக சமர்ப்பிக்கும் முறை சித்திரவதை


naranam
மார் 19, 2025 09:55

கே ஒய் சி, ரீ- கே ஒய் சி, இ- கே ஒய் சி, சி - கே ஒய் சி என்று அப்பப்பா ஒரே பிடுங்கல் தான்.


R S BALA
மார் 19, 2025 09:15

எந்த வங்கியும் இதனை காதில் வாங்கிகொள்ளப்போவதில்லை..


chennai sivakumar
மார் 19, 2025 08:14

எனது வங்கி கணக்கை முடக்கி விட்டனர். எது விஷயமாக சென்ற போது மட்டுமே தெரிந்தது வங்கி கணக்கு 50 வருடமாக உள்ள ஒன்று முடக்க பட்டு.விட்டது என்று. கேட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளோம் என்றனர். பிறகு திருப்பி திருப்பி ஆதார், பான் அட்டை, புகைப்படம் கொடுத்து ஒரு வழியாக செயல் பட ஆரம்பித்தது. கேட்டால் இது ரிசர்வ் வங்கி உத்தரவு. இதுக்கு வங்கி ஊழியர்களும் விலக்கு அல்ல என்பதை அறியவும்.