உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா தேர்தல் முறைகேடு; ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கேள்வி

மஹாராஷ்டிரா தேர்தல் முறைகேடு; ராகுலுக்கு தேர்தல் கமிஷன் கேள்வி

புதுடில்லி: 'மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்' செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டும் காங்கிரஸ் எம்.பி., ராகுல், இதுவரை ஏன் முறையாக புகார் அளிக்கவில்லை?' என தலைமை தேர்தல் கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளது.மஹாராஷ்டிராவில் 2024 நவம்பரில், 288 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹாயுதி கூட்டணி, 235 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. காங்., - உத்தவ் தாக்கரேயின் சிவசேனா - சரத் பவாரின் தேசியவாத காங்., அடங்கிய மஹா விகாஸ் அகாடி கூட்டணி, 50க்கும் குறைவான இடங்களையே கைப்பற்றி, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறவில்லை. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலே, தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். இதை, தலைமை தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது. இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் குறித்து, 'மேட்ச் பிக்சிங் மஹாராஷ்டிரா' என்ற பெயரில், ஆங்கில நாளிதழில் ராகுல் கட்டுரை ஒன்றை சமீபத்தில் எழுதி இருந்தார்.

இதற்கு தலைமை தேர்தல் கமிஷன் தரப்பில் அளித்த விளக்கம்:

காங்கிரசும், குறிப்பாக ராகுலும் தேர்தல் கமிஷனைப் பற்றி பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். அவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் கமிஷன் உரிய ஆவணங்களை கேட்டு ஆஜராகும்படி கூறினால், அவர்கள் ஒருபோதும் ஆஜராக மாட்டர்.மஹாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராகுல் குற்றஞ்சாட்டிய நிலையில், இதுபற்றி கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காங்கிரசுக்கு தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் விளக்கமாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தை ராகுல் சர்ச்சையாக்கி வருகிறார். இது தீவிரமான பிரச்னை என்றால், ராகுல் ஏன் இதுவரை முறையாக எங்களிடம் புகார் அளிக்கவில்லை? தேர்தல் கமிஷனை சந்திக்க ஏன் நேரம் கேட்கவில்லை? இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஜூன் 11, 2025 19:43

உண்மையிலேயே தவறு நடந்து இருந்தால் தானே புகார் கொடுப்பாaf ....பிறகு மக்கள் நீங்கள் எப்படி பாராளுமன்ற தேர்தலில் 99 இடங்கள் வெற்றி பெற்றீர்கள் .....மக்கள் ஓட்டு போட்டு வெற்றிபெறவில்லையா என்று பப்புவை பார்த்து கேட்பார்கள் அல்லவா ....அதனால் தான் புகார் கொடுக்கவில்லை !!!


Anantharaman
ஜூன் 11, 2025 13:03

உடனே கைது செய்து ஆதாரங்கள் தராத வரை சிறை வைக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி பேசும் ....


Chandru
ஜூன் 11, 2025 12:09

Totally unfit to be the leader of opposition. Had it been a strong central govt this immature fellow would have been arrested under National Security Act


சகுரா
ஜூன் 11, 2025 11:44

எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்


M Ramachandran
ஜூன் 11, 2025 10:47

ராகுல் ஒரு ஒண்ணாம் வகுப்பு சிறு பைய்யன். ஆதனால் மன்னித்து விடுவார்கள் என்பதால் புளுகு வதில் சிறந்த பைய்யன்.


Anand
ஜூன் 11, 2025 10:34

இவனை இன்னுமா சேர்க்கவில்லை?


Ganapathy
ஜூன் 11, 2025 08:50

எங்க கட்சி ஆட்சில எனக்கு இரண்டு இந்திய பாஸ்போர்ட் வேற வேற பெயர்ல குடுத்தாங்க.


raja
ஜூன் 11, 2025 07:58

பேச்சை மக்கள் ஒருபோதும் சட்டை செய்வதில்லை.


VENKATASUBRAMANIAN
ஜூன் 11, 2025 07:03

டுபாக்கூர் குற்றச்சாட்டு எப்படி எழுத்து வடிவில் பேசுவார். இவரும் ஸ்டாலினும் பொய் பேசியே வருபவர்கள்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 11, 2025 06:29

தினமும் பொழுது விடிந்தால் ஏதாச்சும் அக்கப்போரை கிளப்பி விடவேண்டியது ...பப்பு குட்டிக்கு ஏதாவது வேலை இருந்தால் கொடுங்கள் ..வேலை இல்லாத்திண்டாட்டம் எவ்வளவு பேசவைக்கிறது ...அப்படியே நேஷனல் ஹெரால்ட் பத்தி ஏதாச்சும் கொளுத்தி போடுங்கள் பப்பு ,,...


புதிய வீடியோ