உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது. 140 கோடி இந்தியர்களின் ஆசீர்வாதம், கூட்டு பங்கேற்பால் பல்வேறு துறைகளில் விரைவான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேகம், அளவு உணர்திறன் கொண்ட புதிய மாற்றங்களை தே.ஜ., கூட்டணி அரசு வழங்கி உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் இருந்து சமூக மேம்பாடு வரை, அனைத்து வகையான முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக மட்டுமல்லாமல், அனைத்து உலகளாவிய பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்கிறது. எங்கள் கூட்டு வெற்றியை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம்.கடந்த 11 ஆண்டுகளில் மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் ஏழை சகோதர, சகோதரிகள் மற்றும் சாமானிய மக்களின் நலனை உறுதி செய்வதாக இருந்தது. சேவை மனப்பான்மையுடன் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். நகர்புற மற்றும் கிராமப்புற பெண்கள் கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடன் வாழ அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

புரொடஸ்டர்
ஜூன் 10, 2025 09:05

இந்த யுகத்தில் பாஜகவினால் முடியாது .


தாமரை மலர்கிறது
ஜூன் 09, 2025 19:02

அடுத்த பத்தாண்டில் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு எலக்ட்ரிக் கார்கள் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு அறையிலும் ஐம்பது இன்ச் டிவி இருக்கும். ஒவ்வொரு வீடும் குறைந்தது மூவாயிரம் சதுரடி பரப்பளவு இருக்கும். இந்தியாவிற்கென்று விண்வெளியில் தனி ஸ்பைஸ் ஸ்டேஷன் அமைக்கப்படும். இரண்டாவது பெரிய பொருளாதார வலிமை மிக்க நாடாக இந்தியா திகழும். இந்திய ஒரு சொர்கபுரியாக திகழும்.


venugopal s
ஜூன் 09, 2025 17:50

நல்லாட்சி யாருக்கு? யாருக்கோ,


தஞ்சை மன்னர்
ஜூன் 09, 2025 16:49

ஹி ஹி மக்கள் பூரா சொல்லிக்கிட்டாங்க நம்பிட்டாங்க


V Venkatachalam
ஜூன் 09, 2025 14:47

நகர் புற மற்றும் கிராமபுற பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் கண்ணியத்துடன் வாழ வழி வகை செய்யப்பட்டுள்ளது. மோடி ஜி ஓட்டு மொத்த இந்தியாவையும் சேர்த்து சொல்லிட்டீங்க. நீங்க சொல்றதுதுல எங்க தமிழ் நாட்டையும் சேர்த்துட்டீங்களே. தவறான தகவலாயிட்டுங்களே. எங்க தமிழ் நாடு பெண்கள் கண்ணியத்துல எந்த லட்சணத்தில் இருக்குன்னு எடப்பாடியார் கிட்டே கேட்டு தெரிஞ்சுக்கங்க. மோடி ஜி நீங்க ரொம்பவே நகைச்சுவையா பேசுறீங்க.


Nada Rajan
ஜூன் 09, 2025 12:38

நல்லாட்சி மக்கள் வாழ்விற்கு அவசியம்


Ramesh Sargam
ஜூன் 09, 2025 11:47

நல்லாட்சி நடக்கவிடாமல் இருக்க எதிர்க்கட்சியினர் மிக மிக கவனம்.


A.C.VALLIAPPAN
ஜூன் 09, 2025 11:46

Excellent Prime Minister. people want to loot and keep for him and his generation but our PM working very hard and very sincere . for Tamilnadu few people always not accepting the truth. some people needs only irs 200 and bottle.


புதிய வீடியோ