உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசா போர் நிறுத்த தீர்மானம்; ஓட்டளிப்பதை தவிர்த்த இந்தியா

காசா போர் நிறுத்த தீர்மானம்; ஓட்டளிப்பதை தவிர்த்த இந்தியா

நியூயார்க் : பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் இந்தியா ஓட்டளிப்பதை தவிர்த்தது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 அக்டோபரிலிருந்து போர் நடந்து வருகிறது. இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புகள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். ஆனால், ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைக்கைதிகள் விடுதலையில் தாமதம் செய்தனர். இதனால் மார்ச் முதல் காசாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் துவங்கும் சூழலை உருவாக்க வேண்டும். இரு தரப்பையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. அதற்காக ஓட்டளிப்பை இந்தியா தவிர்த்தது.காசாவில் போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சமீபத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அனைத்து உறுப்பு நாடுகளும் இதை ஏற்ற நிலையில், அமெரிக்கா, 'வீட்டோ' எனப்படும் தீர்மானத்தை தடுக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வியடையச் செய்தது.இந்நிலையில் ஐ.நா., பொது சபையில் ஸ்பெயின் சார்பில் மீண்டும் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.ஐ.நா., பொது சபையில், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தன. 12 நாடுகள் எதிராக ஓட்டளித்தன. இந்தியா உட்பட, 19 நாடுகள் ஓட்டளிப்பதைத் தவிர்த்தன.இந்த நிலைப்பாடு குறித்து ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் கூறுகையில், “இஸ்ரேல்- - பாலஸ்தீன பிரச்னையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் துவங்கும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்காக ஓட்டளிப்பை இந்தியா தவிர்த்தது. இரு தரப்பையும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கு ஒரு கூட்டு முயற்சி தேவை. மீதமுள்ள பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அசோகன்
ஜூன் 14, 2025 12:14

ஐநா சபையில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கும் தமிழக சட்டசபையில் எடுக்கும் தீர்மானத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை...... கூட்டம் முடிந்ததும் பியூன் அந்த தீர்மான பேப்பரை கிழித்து குப்பை தொட்டியில போட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடுவார்..... ஆனால் இந்த மீடியா கள் நரம்பு புடைக்க விடிய விடிய கத்தி கூச்சல் போடுவார்கள்


veeramani
ஜூன் 14, 2025 09:46

இந்தியா ஏன்றும் தீவிரவாதத்தை அளிக்கவேண்டும் என விரும்புகிறது. ஐ நா சபைக்கு ஒரே ஒரு கேள்வி. காசாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேல் மக்களை பணய கைதிகளாக பிடுத்து பத்தி நபர்களை அநியாயமாக கொன்று குவித்தனர். ஐ நா சபை அன்று எங்கு ஒளிந்திருந்தது தன மக்களை காப்பாற்ற இஸ்ரயேலின் நெதன்யாகு உலக நாடுகளின் வேண்டுகோளிற்கு ஏற்ப பணிந்து போர் நிறுத்தம் செய்தார். அன்றும் கூட அப்பாவி இசுரேலியா மக்களை திரும்ப ஒப்படைக்கவில்லை ஹமாஸ் தீவிரவாதிகள் . நெதன்யாஹு தனது மாக்களை காப்பாற்ற ஹமாஸ் தீவிரவாதிகளை அளிக்க அனைத்து வழிகளையும் அடைத்து சண்டை இடுகிறார். அந்த தீவிரவாதிகளை ஆஸ்பத்திரிகளிலும் அடுக்கு ஆடி குடியிருப்புகளில் வைத்து பாதுகாக்கும் காஜா மக்களை , காஜா வைவ்விட்டு துரத்துவதுதான் சரி. இஸ்ரயேலின் நெதன்யாஹு ஏன் சண்டையை நிறுத்தவேண்டும். காஜா தற்போது இஸ்ரயேலின் ஒருங்கிணைந்த பகுதி. வேண்டுமானால் அண்டை நாடுகள் இந்த மக்களுக்கு அடைக்கலம் வாசிக்க இடம் கொடுக்க முயற்சி செய்யலாமே


Thravisham
ஜூன் 14, 2025 07:40

இத்தாலிய கான்கரஸ் ஆட்சியாக இருந்திருந்தால் கண்டிப்பாக தீர்மானத்துக்கு ஆதரவு அளித்து இந்தியாவின் நடுநிலையை கேலிக்கூத்து ஆக்கியிருப்பார்கள்


Mecca Shivan
ஜூன் 14, 2025 07:14

நல்ல முடிவு ..


முக்கிய வீடியோ