வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அடுத்தவன் வயலில் தோட்டத்தில் ஆடுகளை மேய்க்க விட்டால் அதற்க்கு என்ன தண்டனை என்று சொல்வாரா இந்த அமைச்சர் ,?தூ உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் காங்கிரஸ்
பெங்களூரு : ''ஆடு மேய்ப்பவர்கள் மீது, தாக்குதல் நடப்பதை தடுக்க, அவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்,'' என, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, மேல்சபையில் தெரிவித்தார்.மேல்சபை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் சிதானந்த் கவுடாவின் கேள்விக்கு, கால்நடைத் துறை அமைச்சர் வெங்கடேஷ் சார்பில், அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா அளித்த பதில்:ஆடு மேய்ப்போர் மீது தாக்குதல் நடத்துவது, அடக்கு முறையை கையாள்வது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதை கட்டுப்படுத்த விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்.சிரா தாலுகாவில் 4,78,500 ஆடுகள் உள்ளன. ஆடுகள் வளர்ப்போருக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என, உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். கூடுதல் ஊக்கத்தொகை வழங்க அரசு தயாராக உள்ளது.எங்கள் வீட்டிலும் கூட, 120 ஆடுகள் உள்ளன. ஆடு வளர்ப்பதில் அதிக லாபம் உள்ளது. ஆடு வளர்ப்போர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்வது குறித்து, தகவல் கொடுத்தால் சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும்.கால்நடைகளுக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் தீவன பற்றாக்குறையை போக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எந்த தாலுகாவிலும், தீவன பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்வோம். குறைந்த விலையில், உலர்ந்த தீவனம் வழங்கப்படும்.தீவன இருப்பு குறைவாக இருந்தால், பேரூராட்சி அளவில் கால்நடை முகாம்கள் நடத்தி கால்நடைகளுக்கு தீவனம், குடிநீர் வழங்கப்படும். விவசாயிகளுக்கு தீவனம் உற்பத்தி செய்ய, விதைகள் வழங்கப்படும்.நடப்பாண்டு 1,428 தீவனம் வெட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தோட்டக்கலை விளைச்சலுக்கு நடுவே, தீவனம் விளைவிக்க விவசாயிகளுக்கு வழி காட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்தவன் வயலில் தோட்டத்தில் ஆடுகளை மேய்க்க விட்டால் அதற்க்கு என்ன தண்டனை என்று சொல்வாரா இந்த அமைச்சர் ,?தூ உழைக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் காங்கிரஸ்