உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

தேர்வு முடிவுகளை விட உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி

பனாஜி: 'தேர்வு முடிவுகள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல. கடின உழைப்பே வெற்றியை தீர்மானிக்கும்,' என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் பேசினார்.கோவா மாநிலம் மிராமரில் உள்ள வி.எம்.சல்கோகர் சட்டக் கல்லுாரி பொன்விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் கலந்துகொண்டார்.அவர் பேசியதாவது: தேர்வு முடிவுகள் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரே காரணி அல்ல, நமது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை முக்கியம். நான் சட்டக்கல்லுாரியில் படிக்கும் போது கடைசி வருடத்தில் பாதி நாட்கள் தான் வகுப்பறைக்கு சென்றிருப்பேன். நான் இங்கு 2 ஆண்டுகள் படித்தேன். பனாஜியில் இருந்த இடங்களை பற்றி பல அற்புதமான நினைவுகள் எனக்கு உள்ளன. இந்த கடற்கரை எங்களுக்கு அப்போது, இந்தக்கல்லுாரி வழங்கிய அற்புதமான சட்ட நுாலகத்தை விட மிகவும் ஈர்த்தது. அதன்பிறகு அமராவதிக்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது.அங்கு படித்து தேர்ச்சியாகும் போது, தேர்ச்சி பட்டியலில் 3வது இடத்தில்தான் நான் இருந்தேன். ஆனாலும் நான் சிறந்த மாணவராக இருந்தேன். எனது நண்பர் 2வது இடத்தில் இருந்தார். முதலிடம் பெற்ற மாணவர், ஒரு குற்றவியல் வழக்கறிஞராக மாறி, ஜாமினில் மட்டுமே நிபுணத்துவம் பெற்றார்.2வது இடம் பெற்றவர் நேரடி மாவட்ட நீதிபதியாகி, உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார். நான் 3வது இடத்தில் இருந்தேன். வழக்கறிஞராக இருந்து, இன்று நான் நாட்டின் தலைமை நீதிபதியாக இருக்கிறேன். இதன் மூலம் நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், தரவரிசை என்ன என்பதை பொறுத்து செல்ல வேண்டாம். தேர்வு முடிவுகள் நீங்கள் எந்த வெற்றியை அடைவீர்கள் என்பதை தீர்மானிக்காது. நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புதான் வெற்றியை தீர்மானிக்கும்.இவ்வாறு பி.ஆர் கவாய் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

VASANTHA KANNAPIRAN
ஆக 30, 2025 20:30

வகுப்பை கட் அடியுங்கள் நன்கு உயர வாய்ப்புகள் உள்ளன. நான் அப்படித்தான் செய்தேன் என தலைமை நீதிபதி தெரிவிப்பது லெட்டர் பேட் கல்லூரிகளுக்கு ஊக்கம் சட்டப் படிப்பு மாணவர்களுக்கு சரியான தகவலா தெரியவில்லை ?


Durai Kuppusami
ஆக 25, 2025 08:06

ஊர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு நீதிமன்றங்கள் நல்லா இல்ல.. அதை விட்டு எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒன்றை பேசிக்கிட்டு இருக்க. பல ஆண்டுகள் பல ஆயிரம் வழக்குகள் புதை குழிக்குள் இருக்கு அதுக்கு ஒரு பார்க்காமல் தேவையில்லாமல் தினம் ஒரு பேச்சு..அதுக்கும் மேல நாய்கள் பிரச்சினைதான் இப்ப ஓடிக்கிட்டு இருக்கு இதுதான் ரொம்ப முக்கியம் சுப்ரீம்கோர்ட் இந்த விஷயத்தில் தினம் தினம் ஒரு தீர்ப்பு இல்லையென்றால் கவர்னர் ஜனாதிபதி கால கெடு விஷயம் ஏன் நீங்களே இந்தியாவை ஆளலாம்.... ஜெய்ஹிந்த்


Tetra
ஆக 24, 2025 06:01

வந்துட்டாரய்யா நீதி சொல்ல


ManiMurugan Murugan
ஆக 23, 2025 23:09

அருமை


G S Krishnan
ஆக 23, 2025 22:55

Supreme Court is very adamant in accepting the powers of Governer and President enshrined in the Constitution from hearing the arguments of SG and reiterating that there will be no change in the April 8 Judgement. The presidential reference, Central Govt., and Governors side Arguments clearly spelt about the limitations of SC. It is the high time to end the collegium System and all Judges and Judicial Officers to be under a monitoring tem after so much cash found in judges quarters.


ரவிச்சந்திரன்
ஆக 23, 2025 22:38

நீங்கள் நேர்மையான நீதிபதி இல்லை என தெரிகிறது.உம் தமிழக மதுபான கொள்ளை வழக்கில் தடை போட்டது.


ரவிச்சந்திரன்
ஆக 23, 2025 22:35

தமிழக அரசின் மதுபான கொள்ளை அதற்கு நீங்கள் விதித்த தடை மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது நீங்கள் நேர்மையான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லை


ரவிச்சந்திரன்
ஆக 23, 2025 22:31

நீங்கள் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு தான் திருடர்கள் தப்பித்து கொண்டு இருக்கிறார்கள்.உதாரணம் தமிழக மதுபான கொள்ளைக் காரர்கள்.


c.mohanraj raj
ஆக 23, 2025 21:35

நீங்கள் என்ன சொன்னாலும் இந்தியாவில் நீதிபதிகள் தேர்வு முறை மிகவும் தவறு அதுவும் குறிப்பிட்ட காலமாக உலகமே மிகவும் கேவலமாக பார்க்கும் நீதி துறையாக மாறிவிட்டது எந்த நாட்டிலும் இவ்வளவு தரம் தாழ்ந்ததாக தெரியவில்லை 200 கோடி ரூபாய் பணம் பிடிப்பட்டும் அவரைப் அவரை பதவி நீக்கம் செய்ய சட்டமே திறனறிக் கொண்டிருக்கின்றது என்றால் இந்த சட்டம் நமக்கு எதற்கு ஒரு ரூபாய் எம்ஆர்பியை விட அதிகமாக வாங்கினார் என்பதற்காக 2500 ரூபாய் தண்டம் கட்டிய நாடு இது ஆனால் ஏன் இப்படி போய்விட்டது என்று தெரியவில்லை இதற்கு ஒரு கடிவாளம் போடவில்லை என்றால் நீதிபதிகளே சேர்ந்து நம் நாட்டை வேறொரு நாட்டிற்கு கூட விற்று விடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.


திகழ்ஓவியன்
ஆக 23, 2025 21:08

கள்ள வோட்டு பிஜேபி , நல்ல வோட்டு DMK


Kasimani Baskaran
ஆக 24, 2025 05:21

ஓரமா போய் காமடி பண்ணு...


முக்கிய வீடியோ