உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகா சட்டசபையில் களேபரம்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்

கர்நாடகா சட்டசபையில் களேபரம்: பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பரபரபான சூழல் நிலவியது. 18 எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. மாநில பட்ஜெட் கடந்த 7ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்க்கட்சியான பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகள், பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m4k7cw1m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (மார்ச் 21) பொதுப்பணி ஒப்பந்தத்தில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் ஒப்புதலுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர்.இதற்கிடையே, அரசியல் தலைவர்களை ஹனி டிராப் மூலம் சிக்க வைப்பதாக கூறி சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கை முன் கூடி, காகிதங்களை கிழித்து தூக்கி எறிந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.இதனையடுத்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
மார் 21, 2025 17:41

சித்துவின் சித்து விளையாட்டு நீடிக்காது ஜாதி வாரி மத வாரி பிரித்து ஆளுவதில் சித்து எத்தன் பிறகு பா.ஜா.பாவை குறை சொல்வார் மூடா வழக்கை மூடுவதற்காக எடுத்துக்கொண்ட செயல் இது அவரையே மேலும் தாக்கும் நாடே நரகம் ஆனது காங்கிரஸின் ஐடா ஒதுக்கிவிட்டால்தான் அம்பேத்கார் சொன்னது முதல் பத்து ஆண்டுகளுக்கு மட்டுந்தான் இட ஒதுக்கிட்டை அமல் படுத்த வேண்டும் என்று ஆனால் இது அனுமார்வால் போன்று முற்றுப்புள்ளி இல்லாமலேயே சென்று கொண்டிருக்கின்றது


अप्पावी
மார் 21, 2025 15:33

பா.ஜ ஆளுங்க கண்ணியமானவங்களாச்சே. ஓம் பிர்லா சொன்னாரே கோவாலு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை