உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ்., கைது

லஞ்ச வழக்கில் ஐ.ஏ.எஸ்., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் மாநிலம், சுரேந்திரநகர் கலெக்டராக இருந்தவர் ராஜேந்திர குமார் படேல். இவரது அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றுபவர் சந்திர சிங் மோரி. இவர் வருவாய்த் துறை துணை அதிகாரியாக பணியாற்றியபோது, சவுராஷ்டிரா குடியேற்ற குத்தகைத் தீர்வு சட்டத்தின்படி, பொதுமக்கள் பெயருக்கு நிலத்தை மாற்றும் பணிக்கான விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.அப்போது, விண்ணப்பங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க விண்ணப்பதாரர்களிடம் மோரி லஞ்சம் பெற்றுள்ளார். இது தொடர்பாக பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், மோரி மற்றும் சிலரை கைது செய்தனர்.லஞ்சம் பெற்ற வழக்கில் தொடர்பிருப்பதாக கூறி, சுரேந்திர நகர் கலெக்டர் ராஜேந்திரகுமார் படேலை, ஒரு வாரத்துக்கு முன் எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாநில அரசு மாற்றியது. இந்நிலையில், லஞ்சம்பெற்றதில் தொடர்புடையதாக பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, படேலை கைது செய்தது.முன்னதாக அமலாக்கத் துறையினர் அளித்த புகாரின்படி, குஜராத் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் படேல் மற்றும் மூவர் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சிந்தனை
ஜன 04, 2026 18:26

கல்வி என்றால் மனிதனை நல்லவனாக மாற்ற வேண்டும் முதலில் பிறகுதான் மற்றவை ஆனால் படித்தவர்கள் தான் அதிகமாக திருடுகிறார்கள் நாட்டை கொள்ளை அடிக்கிறார்கள் நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுக்கிறார்கள் இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால் இந்த கல்வி திட்டத்தை ஏற்படுத்தியது இங்கே கொள்ளை அடிக்க வந்த வெள்ளையன் அதையே நாம் இன்னமும் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவேண்டுமா கல்வித்துறைக்கு அறிவே இல்லையா


Sekar Times
ஜன 04, 2026 14:36

லஞ்சம் ஊழல் குற்றங்கள் கடுமையான தண்டனை மூலம் ஒழிக்க முடியும்


பெரிய ராசு
ஜன 04, 2026 13:15

தமிழ்நாட்டில் பார்த்தால் அநேக IAS உள்ளே இருக்கவேண்டியவர்கள் , அத்துணை ஊழல் ..அனால் அதிகாரம் அவர்களை காப்பாற்றுகிறது


Narayanan Muthu
ஜன 04, 2026 11:40

குஜராத்தா இதிலென்ன வியப்பு.


Keshavan.J
ஜன 04, 2026 15:37

இதிலென்ன வியப்பு.என்றால் அங்கே உன்னை போல கொத்தடிமை கள் இல்லை என்றது அர்த்தம். இங்கே 4 ரவுடி பசங்க கஞ்சா குடிச்சிட்டு அரிவாளால் மண்டைய வெட்டுவனுங்க உன்னை போல திராவிட நக்கிகள் சும்மா இருப்பிங்க.


P Ramakrishnan
ஜன 04, 2026 11:32

குஜராத் அரசை பாராட்ட வேண்டுமே. அங்கோ மாவட்ட கலெக்டர், அதிகாரியை கைது செய்கிறார்கள் தமிழ் நாட்டில்?


Apposthalan samlin
ஜன 04, 2026 10:54

இந்த பிஜேபி அரசு வீட்டுக்கு போனால் ஊழல் வழக்கு வெளிச்சத்துக்கு வரும் .


Mecca Shivan
ஜன 04, 2026 09:47

திராவிட பெருச்சாளிகள் என்பது இனம் சார்ந்தது மட்டுமல்ல குணம் சார்ந்ததும். உதாரணம் குஜராத்தில் ஒரு திராவிட அதிகாரி.. தமிழகத்தில் லஞ்சம் இல்லை ஊழல் இல்லை கொள்ளை இல்லை கொலை இல்லை போதை இல்லை இனவெறி இல்லை மொழி வெறி இல்லை ஜாதி வெறி இல்லை நம்புங்கள் மக்களே..


சந்திரன்
ஜன 04, 2026 09:25

இங்கேயும் IAS ஆப்பீஸர்ஸ் கோடிகணக்கில சம்பாதிக்கறாங்க ஆனா மாட்றதில்ல எல்லாத்திலும் லஞ்சம் லஞ்சம் லஞ்சம் காசுக்கு அலையும் ஜென்மங்கள் எல்லாவற்றிற்கும் கேடு கெட்ட மக்கள்தான் காரணம்


Perumal Pillai
ஜன 04, 2026 09:11

பிரிக்க முடியாதது எதுவோ ? IAS சும் லஞ்சமும்.


Raja k
ஜன 04, 2026 08:45

குஜராத் திராவிட மாடல், விடியா ஆட்சியின் அலங்கோலம், சங்கிகளின் தூய்மையான நிருவாகத்துக்கு உதாரனம்


புதிய வீடியோ