உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சாத்தியமற்ற வாக்குறுதி!

சாத்தியமற்ற வாக்குறுதி!

ஜம்மு - -காஷ்மீர், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கும் உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற தவறிவிட்டது. சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளித்து, மக்களை தவறாக பா.ஜ., அரசுவழிநடத்தியுள்ளது. எல்லையோர பகுதியில் கூடுதல் பாதுகாப்பு அவசியம். - ஒமர் அப்துல்லா, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சி

ஆபத்தான மனநிலை!

காங்., தலைவர் ராகுல், மார்பில் சுடப்படுவார் என, 'டிவி' விவாதத்தில் பா.ஜ., செய்தித்தொடர்பாளர் பகிரங்கமாக கூறியது, அக்கட்சியின் ஆபத்தான மனநிலையை பிரதிபலிக்கிறது. ராகுல் செல்லும் இடங்களை பொதுவெளியில் பகிர்வது பாதுகாப்பு மீறல் இல்லையா? -அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

இந்தியர்களின் நம்பிக்கை!

சுதேசி என்ற கருத்து இந்தியாவிற்கு புதிதல்ல; அது சுதந்திரப் போராட்டத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியது. இது, பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுயசார்பு இந்தியா என்பது மத்திய அரசின் கொள்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களின் நம்பிக்கை. -பூபேந்திர சிங் சவுத்ரி,உ.பி., தலைவர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
செப் 30, 2025 11:52

நமது இந்திய தேசத்தில் பல மொழிகள் பல மதத்தினர் ஒற்றுமையுடன் வாழ்ந்துவருகிறார்கள் .ஆயினும் வட கோடியில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் மத தலைவர்கள் சில சில்லி பிரச்சினைகளை எழுப்பி அமைதியை சீர்குலைக்கிறார்கள். லடாக் ,ஜம்முகாஷ்மீர் மக்களுக்கு டீசல் பெர்டோல் அரிசி துணிமணிகள் கார்கள் வண்டிகள் மற்றும் சால வசதிகளை ஏற்படுத்தியுள்ளது நமது மத்திய அரசு இதை உணராமல் பிரச்சினைகளை ஓதி பெரிது படுத்துகிறார்கள் அண்டையில் சீன மக்கள் லடாக், ஜம்முகாஷ்மீரை சாப்பிட தயாராக உள்ளார். சீனா நுழைந்தால் எவராவது பேச முடியுமா . லடாக் மக்களே சிந்தியுங்கள்.


முக்கிய வீடியோ