உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு

பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு

விஜயவாடா: இந்தியா 4வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தை வெளிப்படுத்தி உள்ளது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம், ஐ.எம்.எப்., தரவுகளை மேற்கோள் காட்டி, உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5வது இடத்தில் இருந்த இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடானது. இந்தியாவின் பொருளாதாரம் இப்போது 4 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே பெரிய பொருளாதார நாடாக இருக்கின்றன. நாம் உறுதியாக இருந்தால், 3 ஆண்டுகளில், நாம் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம் என்று கூறியிருந்தார்.சுப்பிரமணியம் கூறியதை தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று கூறியதாவது:உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறுவது, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்தையும் வலுவான பொருளாதார நிர்வாகத்தையும் பிரதிபலிக்கிறது.பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா 4.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) அடைந்து, ஜப்பானை விஞ்சியது, மேலும் 2047ம் ஆண்டுக்கான விக்ஸித் பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை அடையும் பாதையில் உள்ளது.இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

இளந்திரையன் வேலந்தாவளம்
மே 26, 2025 10:21

மோடி ஜி பிரதமராக தேர்வு செய்வதற்கு முன்னால் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.. நாயுடு காரு, நிதீஷ், தேவ கவுடா... இன்றைய நிலை மும்மூர்த்திகளும் துதி பாடும் நிலை...


அப்பாவி
மே 26, 2025 09:51

ரெகுலரா காசு வந்திட்டிருக்குன்னு பொருள் காண்க. தில்லியிலிருந்து ஆந்திராவை தொலைநோக்கியிலிருந்து நல்லா பாக்குறார்.


Barakat Ali
மே 26, 2025 10:21

இருந்தாலும் 2ஜி போன்ற கொள்ளைகள் இருக்காது .... .


Barakat Ali
மே 25, 2025 23:44

அவர் சொல்வது திமுகவின் எடுப்ஸ்க்குத்தான் பாவம் அதிர்ச்சியாக இருக்கும் ......


m.arunachalam
மே 25, 2025 23:16

As the so called developed countries did We are trying to live a Life of unwanted, undeserving and unsustainable level of comfort and deceiving ourselves. It is time to change our perception.


Kjp
மே 25, 2025 23:02

தமிழ் நாட்டிற்கு தொலைநோக்கு பார்வை டாஸ்மாக் விற்பனை கடன் அதிகமாக வாங்குவது . நம் முதல்வர் மத்திய அரசு மேல் குற்றம் சொல்வது போல் மம்தா பானர்ஜி கூட சொல்வது இல்லை.


அருமை மாடல்
மே 25, 2025 22:19

10 லட்சம் கோடி கடன். கள்ளசாராய மரணத்திற்கு 10 லட்சம் இனாம்...


sankaranarayanan
மே 25, 2025 21:47

பிரதமரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவுக்கு புதிய அந்தஸ்து: ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெருமிதம். மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துகொண்டு தனது போக்கை மாற்றிக்கொண்டால் இங்கே முதியவருக்கு நல்லது வீரமணியிடமும் ஆர்.எஸ்.பாரதியிடமும் அரசியல் கேட்டால் உருப்பட்டப்பால தான் அவர்களின் ஆலோசனையால் நாடு சீரழியும்,ஆட்சியும் கவிழும்...


m.arunachalam
மே 25, 2025 21:42

We are living a life of unwanted, undeserving and unsustainable level of comfort on borrowed money and we are giving different kind of explanation. Ponder.


m.arunachalam
மே 25, 2025 21:36

கடன் வாங்கிய பணத்தில் பளபளப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அதற்க்கு வேறு விளக்கம் கொடுக்கிறோம் . தெளிதல் நலம் .


m.arunachalam
மே 25, 2025 21:33

வேறு எப்போதையும் விட தற்போது மக்களின் வாழ்க்கை சிரமமாக தான் உள்ளது . மக்களின் மனநிலை மிகவும் மாறி விட்டது . உழைக்காமலே அனைது சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது . தெளிதல் நலம் .


முக்கிய வீடியோ