வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழக மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. தமிழக சட்ட பேரவை வரைவு மசோதா உச்ச நீதிமன்ற நீதிபதியின் அதிகாரத்தை கைபற்றி court tabedar வசம் கொடுப்பதற்கு சமம். மிகவும் ஆபத்தில் முடியும். இந்திய ஜனாதிபதியின் கடிதம் தொடர்பான விசாரணை வேலை கொடுத்த முதலாளியை அந்த நிறுவன தொழில் சங்கம் விசாரிப்பதற்கு சமம்.
அரசியலமைப்பு சட்டம் 142 ஒரு மாநில ஆளுநரை அவருடைய பொறுப்பிலிருந்து நீக்க உச்சநீதிமன்றத்திற்ற்கு வழிவகை செயகின்றதா என்றதையும் பகுத்தறியவேண்டும் .
இந்த வழக்கு ஆரம்பம்முதலே தவராக கையாளப்பட்டிருக்கின்றது .இந்திய அரசியல் அமைப்பு சட்டம்பிரிவு 361 இல் உள்ள ,ஜனாதிபதி அல்லது கவர்னர் மீது அவர்கள் ஆற்றும் கடமை மீதான வழக்கு தொடுக்க முடியாது என்ற சட்டம் மீறப்பட்டிருக்கின்றது . மொத்தம் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட சட்டவரைவுகள் 181இல் 9 மட்டுமே ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றது .அது ஏன் என்று ஆராயப்படவில்லை . அந்த 9 தீர்மானங்களும் ஆளுநரின் பதவி நீக்கும் சம்பந்தப்பட்டது என்பதால் ,அதற்க்கு மாநில சட்டசபைக்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஆராயப்படவில்லை . விசாரணையின் போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பரிந்துரையான ,அரசியல் அமைப்பு குழுவிற்கு அனுப்பும் பரிந்துரை ஏற்கப்படவுமில்லை, நிராகரிக்கப்படவுமில்லை ,அதனைப்பற்றியதகவல் ஏதும் தீர்ப்பில் குறிப்பிடவும் இல்லை . இந்த வழக்கில் நாட்டின் ஜனாதிபதி வாதியாகவோ அல்லது பிரதிவாதியாகவோ இல்லாதபட்சத்தில் அவருக்கு எதிராக ஒரு தீர்ப்பு அவரின் கருத்துரை கேட்காமலேயே எழுத சட்டத்தில் வழிவகை உள்ளதா என்று தீர்மானிக்கப்படவில்லை . தீர்ப்பு அரசியல் அமைப்பு சட்டம் 142 இல் உள்ள அதிகாரம் படி எழுதப்பட்டிருக்கும் பட்சத்தில் அதில் உள்ள நிபந்தனைகள் ஆராய்ந்து கடைபிடிக்கவில்லை . உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் விதி 142 இன் படி தீர்ப்பு வழங்கினால் அது நாடு முழுவத்திற்ற்கும் பொருந்தக்கூடியது என்பதால் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் 3 மாதத்திற்கு மேல் நிலுவையில் உள்ள எல்லா தீர்மானங்களும் அங்கீகரிக்கப்பட்டதாக கருதலாமா என்பதை தெளிவாக்கப்படவில்லை . இத்தனை குறைபாடுகளும் மக்களுக்கு உச்சநீதிமன்றத்தின்மீது உள்ள நமிக்கையை குறைப்பதாக உள்ளதால் மீண்டும் அரசியல் அமைப்பு சட்டக்குழுவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சரியான தீர்ப்பு வழங்குவதே சரியானதாக இருக்கும் .