உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி.,கூட்டத்தொடரில் பங்கேற்க அப்துல் ரஷீத் டில்லி கோர்ட்டில் மனு

பார்லி.,கூட்டத்தொடரில் பங்கேற்க அப்துல் ரஷீத் டில்லி கோர்ட்டில் மனு

புதுடில்லி: வரும் பார்லி., கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி சிறையில் உள்ள லோக்சபா எம்.பி., அப்துல் ரஷீத் டில்லி கோர்ட்டில் மனு செய்துள்ளார்.காஷ்மீரைச் சேர்ந்தவர் இன்ஜினியர் ரஷீத் எனப்படும் அப்துல் ரஷீத் இவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார்.நடந்துமுடிந்த 2024 லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் பாராமுல்லா லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்டியிட்டார். இதில் அப்துல் ரஷீத் வெற்றி பெற்று லோக்சபா எம்.பி.யாக தேர்வு பெற்றார். கடந்தாண்டு பரோலில் வெளியே வந்து எம்பி.யாக பதவியேற்றார்.இந்நிலையில் வரும் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் 10ம் தேதி முதல் துவங்கி, ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வேண்டி டில்லி கோர்ட்டில் கடந்த பிப்ரவரி27-ல் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரஷீத் மனுவுக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி வரும் 5 ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தமிழ்வேள்
மார் 04, 2025 20:15

தண்டனை பெற்ற அரசியல் வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை... நியாயம்...தேச விரோத பயங்கரவாதம் செய்து தண்டனை பெற்ற குற்றவாளி எப்படி தேர்தலில் போட்டியிட முடியும்? மனு தாக்கலையே அனுமதித்தது பெருந்தவறு.. தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று தகுதி நீக்கம் செய்ய வேண்டும்....கிரிமினல் சிவில் தண்டனை பெற்றவர்கள் தண்டனைக் காலம் முழுவதும், பிறகு விடுவிக்க பட்ட பின்பு பதினைந்து ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடுவது தடுக்க பட வேண்டும்... ஓட்டு உரிமையை சஸ்பென்ட் செய்து விட வேண்டும்.


c.mohanraj raj
மார் 04, 2025 13:23

கூறுகெட்ட சட்டம் நன்றாக தான் வேலை செய்கிறது சிறையில் இருக்கும் ஒருவன் எம்பி ஆகிறார் என்றால் எப்படி இருக்கும் நாடு


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 04, 2025 09:06

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக 2019-ல் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் உள்ளார் ..... அப்பவே ஏன் போட்டு தள்ளலை ??


Shankar
மார் 03, 2025 23:26

தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டியவரை சிறையில் அடைத்த பிறகு தேர்தலில் போட்டியிட அனுமதித்தது எந்தவிதமான சட்டம்? இதில் இவருக்கு வெளியே வர எந்த காரணமும் கிடைக்கவில்லை. நல்லவேளை நல்லவேளை நெஞ்சு வலிக்கிறதென்று சொல்லவில்லை.


Suppan
மார் 04, 2025 10:30

தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குறை சொல்லவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை