உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு

பண மூட்டை விவகாரம்; பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு

புதுடில்லி: பண மூட்டை சிக்கிய விவகாரத்தில், பதவி நீக்க நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இதையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை வலுத்தன. வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக., 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கண்டனத்தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇந்நிலையில், நீதிபதி யஷ்வந்த் சர்மா மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவின் அறிக்கைகள் மற்றும் பதவி நீக்க நடவடிக்கைகளுக்கான பரிந்துரையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். குற்றச்சாட்டு ஆதாரமற்றது என நீதிபதி யஷ்வந்த் வர்மா தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் முடிவுகளை ரத்து செய்யவும், பதவி நீக்கப் பரிந்துரையை ஒதுக்கி வைக்கவும் கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Selvaraj K
ஜூலை 20, 2025 00:00

தினமலர் பத்திரிகை மீது நான் நம்பிக்கை வைத்தது உண்மையை உரைக்க சொல்வதாள் தான் நான் இதில் பதிவு செய்வது அணைத்தும் சட்டத்துக்கும் மனசுக்கும் சரி பட்ட உண்மையானத இருக்கும் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் தெளிவு இல்லாத குழப்பங்கள் ஆதாவது தவறு செய்தவர்கள் தப்பிக்க ஏதுவாக இருக்குது பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக இல்லை புதிதாக திருத்தப்பட்ட மூன்று சட்டத்தில் முக்கிய சட்ட பிரிவையே தூக்கிட்டாங்க மற்றும் அரசு ஊழியர்கள். இவர்களுக்கு அவகாசம் 120 நாள்கல் ஆனால் சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கும் குடியரசு தலைவர் மற்றும் கவர்னர் 60 நாள்கல் ? இப்படி ஒரு சட்டம் நாட்டுக்கு தேவையா ? இது பாதிக்கப்பட்டவன மீண்டும் படு குழியில் தள்ளும் எந்த சட்டம் உருவாக்குனாலும் தற் காப்பு இருக்கனும் ஆண் பெண் பகு பாடு கூடாது ஆனால் பெண்ணுக்கு மட்டும் எதுக்கு விதி விளக்கு ? இது தவறான முன்னுதரனம் ஆகாத ? அரசியல் சாசனமே மீற படுது சாமானியன் இளக்கரமா ?


Selvaraj K
ஜூலை 19, 2025 23:04

உச்ச நீதி மன்றத்த விடுங்க சென்னை உயர் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்டவன விட தங்களுக்கு கப்பம் லஞ்சம் கட்டும் வக்கீல் தான் முக்கியம் என்று சட்ட விதிய உருவாக்கி வைத்து கொண்டு பாதிக்கப்பட்டவங்க யாரும் வர கூடாதுனு இவுங்களுக்கு நீதி வழங்க கூடாது நீதிபதிகள் சொன்னது தான் சட்டம் தவறு செய்தாளும் கேள்வி கேட்க கூடாதுனு சட்டம் உருவாக்கி அதை அரசு கெசட்டில் வெளியீட்டு இருக்குது நீதி துறையில் நடக்கும் தவறுக்கு அரசுக்கு பங்கு உண்டு. நீதி மன்றமும் சட்டம் உருவாக்கும் போது வக்கீல்களுக்கு முக்கியதுவம் கொடுக்க வில்லை அப்படி கொடுத்த நீதி துறையின் கட்டமைப்பு தகர்ந்து விடும் பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்காது இதை வக்கீல் மற்றும் சாட்சிய சட்டங்கள் தெளிவு படுத்துது காவல் துறைய இருந்தாலும் யாரும் கடை பிடிக்குறது இல்லை


sankaranarayanan
ஜூலை 18, 2025 19:15

வெட்கப்படணும் வேதனைப்படணும் உடனே பதவி விலகியிருக்க வேண்டும் அதுதான் நீதி அரசர்களுக்கு மரியாதை அடுத்தவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு அதைவிட்டு விட்டு மென்மேலும் அப்பில் செய்வது வழக்கை திசைதிருப்ப செய்யும் சூழ்ச்சியே இவருக்கு இருந்த கொஞ்ச மரியாதையும் அனுதாபமும் முற்றிலும் போய்விடும் அரசியல் வியாதி போன்று மாபெரும் குற்றம் செய்த ஒரு நீதிபதி நடந்து கொள்கிறார் வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம்


D Natarajan
ஜூலை 18, 2025 17:33

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாடு எங்கே. கேடுகெட்ட நீதி துறை. அறிவற்ற மத்திய அரசு. உலகத்திலேயே மிக மோசமான நீதி துறை. மத்திய அரசின் சட்ட அமைச்சர் தூங்கு கிறாரா . பிரதம மந்திரி நீதி துறையில் அவசரமாக மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்


Iyer
ஜூலை 18, 2025 16:47

5000 ரூபாய் பிக்பாக்கெட் அடித்து பிடிபட்டவன் கதி என்ன என்று நாம் எல்லோரும் அறிவோம். 5000 கோடி ரூபாய் பிக்பாக்கெட் அடித்த தாய்-சேய் - ஆவண நிரூபணங்கள் இருந்தும் நமது நீதி மன்றங்கள் இன்னும் கைது செய்யவில்லை


Jack
ஜூலை 18, 2025 16:40

நேரா சுப்ரிம் கோர்ட் ?


Perumal Pillai
ஜூலை 18, 2025 15:26

One thing is certain that all comments made on this forum is just not only against this individual Tirudan but against the entire tem which is rotten beyond redemption. He is the proverbial tip of the iceberg.


ஆரூர் ரங்
ஜூலை 18, 2025 13:51

ரொம்ப நல்லவரு. இவரை விட கூட இருப்பவர்கள் இன்னும் நல்லவர்கள். உத்தமர்கள்.


Perumal Pillai
ஜூலை 18, 2025 13:32

வெட்கம் மானம் ரோசம் இல்லாத வெறும் பயல் இந்த நீதி வியாபாரி அரசர் .


Narayanan
ஜூலை 18, 2025 13:13

ஆ.ராஜா, செந்தில் பாலாஜி வழக்கை நடத்தி தீர்ப்பு சொன்ன ஓய்வு பெற்ற நீதிபதிகளையும் விசாரணை வளையதிற்குள் கொண்டுவரவேண்டும் .