உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

யுனிசெப் இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை 'யுனிசெப்' இந்தியா அமைப்பு நியமித்தது. ''யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்'' என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.யுனிசெப் என்பது ஐநாவின் குழந்தைகள் நல நிதியம். உலகின் 190 நாடுகளில் இந்த அமைப்பு செ யல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவின் சார்பில், ஏற்கனவே சினிமா பிரபலங்கள் பலர் தூதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிக்கை க்கான தேசிய விருது பெற்றவர். இது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ''குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை. யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ