அரசு வலுப்பெறும்! உத்தரகண்ட் முதல்வர்
அசாம் முதல்வராக தேர்வான ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கு வாழ்த்துகள். பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழும் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் அர்ப்பணிப்பு மூலமும், அசாமில் இரட்டை இன்ஜின் அரசின் உறுதிப்பாடு மேலும் வலுப்பெறும். வளர்ச்சி அடைந்த, தற்சார்புடைய அசாமை கட்டமைக்கும் கனவு நனவாகும். புஷ்கர் சிங் தாமி உத்தரகண்ட் முதல்வர், பா.ஜ.,பொய் குற்றச்சாட்டு! ராஜ்யசபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற மக்கள் ஜனநாயக கட்சி உதவியது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இதை மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே, எங்கள் அரசுக்கு எதிராக பொய்யான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அக்கட்சியின் தலைவர் மெஹபூபா முப்தி சுமத்துகிறார். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சிசுயபரிசோதனை தேவை! பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை, பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீது தவறாகப் பயன்படுத்துகிறது. தற்போது, இந்த நடவடிக்கையை எதிர்க்கும் ஆம் ஆத்மி அரசு, மாநிலத்தில் இதுவரை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். மணீஷ் திவாரி லோக்சபா எம்.பி., காங்கிரஸ்