உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛ நீட் வினாத்தாள் வெளியான வழக்கு: சி.பி.ஐ., 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

‛ நீட் வினாத்தாள் வெளியான வழக்கு: சி.பி.ஐ., 3-வது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

புதுடில்லி: நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சி.பி.ஐ., நேற்று மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் எழுந்தது.மே 5ல் நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதிலும் குளறுபடி நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக பீஹாரில் சிலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மஹாராஷ்டிராவில் 2 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.இதனை ஏற்று, நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கடந்த ஜூனில் விசாரணையை துவக்கி நடத்தி வந்தனர்.இதனையடுத்து பீஹார் மாநிலம் பாட்னா கோர்ட்டில் நேற்று 21 பேர் மீது மூன்றாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.ஏற்கனவே கடந்த ஆக.01-ல் 13 பேர் மீது முதல் குற்றப்பத்திரிகையும், செப்.20-ல் 6 பேர் மீது இரண்டாவது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. இந்நிலையில் நேற்று மூன்றாவது குற்றப்பத்திரிக்கை என இதுவரை 40 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Lion Drsekar
அக் 06, 2024 10:59

இது ஒரு தொடர்கதை, வந்தே மாதரம்


Gnanamjayam Pugalarasan
அக் 06, 2024 06:37

நீட் 2024 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 10 தேர்வு மையங்களில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. நீட் 2025 தேர்வின் போது நாமக்கல் தேர்வு மையங்களில் சிபிஐ தனது ரேடாரில் கண்காணிக்க வேண்டும்.


Gnanamjayam Pugalarasan
அக் 06, 2024 06:26

The integrity of the NEET UG 2024 question paper was compromised in the NAMAKKAL district. Anomalies were observed in the distribution of scores at 10 exam centers in the district, displaying a bell-shaped curve. It is recommended that enhanced scrutiny, perhaps through CBI involvement, be implemented for the NAMAKKAL exam centres during the 2025 NEET UG Exam to ensure the fair conduct of the exam. Additionally, there were concerns that a disproportionate number of medical seats were secured by NEET aspirants from Namakkal. It is essential to thoroughly investigate these discrepancies to uphold the fairness and transparency of the admissions process.


அப்புசாமி
அக் 06, 2024 05:03

என்ன? ஒரு முப்பதாயிரம் பக்கம் தேறிச்சா? அப்பத்தானே படிக்க ஆரம்பிச்சு கொட்டாவி வந்து படிச்சுப் பாக்காமலேயே ஆதாரம் இல்லைன்னு எல்லாரையும் விடுதலை செய்ய முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை