உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்க உத்தரவு!

ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்க உத்தரவு!

புதுடில்லி: ரூ.500 புழக்கத்தை குறைக்க, ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.நாட்டில் தற்போது 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வாபஸ் பெற்றுவிட்டது. மிகக்குறைந்த அளவிலான பணம் மட்டுமே வங்கிக்கு திரும்ப வராமல் உள்ளது. அந்த வகையில் தற்போது புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ரூ. 500 தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g0z76ohk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.,களிலும் 75 சதவீதம் வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும், அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 90% வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தேவையான அளவு புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், 500 ரூபாய் நோட்டு புழக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் வைக்கும் பெட்டிகளுக்கு காசட் என்று பெயர். வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ஒரு காசட்டில் 75 சதவீதமும், அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் ஒரு காசட்டில் 90 சதவிகிதமும், 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்க வேண்டும் என்று மட்டுமே கூறியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ஏழை எளிய மக்களின் பயன்பாட்டுக்கு 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த மதிப்புள்ள ரூ.100, ரூ.200 நோட்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதுவே, ஏ.டி.எம்.,களில் ரூ.100, ரூ.200 நோட்டுகளை அதிகம் வைக்கும் உத்தரவுகளின் நோக்கமாகும். ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். தொடர்ந்து பயன்பாட்டிலும் இருக்கும். அதைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை கூறியது தானே என்றும் இப்போது கூட 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். சந்திரபாபு நாயுடுவின் பேட்டியை தொடர்ந்து, பணம் மதிப்பிழப்பு தொடர்பாக பல விதமான உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

sundarsvpr
ஜூன் 05, 2025 08:27

பத்தாயிரம் என்ற கட்டில் நூறு ரூபாய் நோட்டு நூறு இருக்கும். இதனை 99 நூறு நோட்டு மீதி எண்ணத்தை சில்லறை நோட்டுகள் வைத்து கட்டலாம். சில்லறை நோட்டுகள் குறைவால் வணிகத்தில் தேவையற்ற பொருள்களை கொடுத்து சரிசெய்யப்படுகிறது. பாதிக்கப்படுவது மிகவும் சாதாரண மக்கள்.


G Mahalingam
ஜூன் 04, 2025 16:58

உபிகளுக்கு அதிகபட்ச தொகை 200 ரூபாய் தான் திமுக கொடுத்து வருகிறது. இதனால் உபிக்கள் பாதிக்கப்பட்ட மாட்டார்கள். இனி அரிசி சாக்கை அல்லது சீனி சாக்கை தான் ஹாவலா பணம் மாறும்.


Mohanraj
ஜூன் 04, 2025 16:17

Go for digital payment please


Rengaraj
ஜூன் 04, 2025 15:26

தேர்தலில் முறைகேடாக நடக்கும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த அடுத்த வருடம் நடக்கப்போகும் ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னால் ஐந்நூறு ருபாய் நோட்டுகள் மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. இது ஒரு யூகம்தான் . திமுக மற்றும் மம்தா வுக்கு ஒரு எச்சரிக்கை


Rengaraj
ஜூன் 04, 2025 15:18

500 ருபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுக்கவேண்டும் என்று ஏற்கெனெவே சந்திர பாபு நாயுடு சிக்னல் கொடுத்து விட்டார். மோடி அதை செய்யப்போகிறார். ஏற்கெனெவே ரிசர்வ் வாங்கி மூலம் மக்களுக்கு அறிவித்துவிட்டோம் , மக்களுக்கு பாதிப்பில்லை என்று மோடி அரசு ஒரே இரவில் செல்லாது என்று சொன்னாலும் சாதாரண மக்களுக்கு தற்போது அதிர்ச்சி அளிக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் படிப்படியாக அந்த ருபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து எடுக்கும் இந்த முடிவை வரவேற்கலாம்.


Tiruchanur
ஜூன் 04, 2025 14:41

திமுக, கான் க்ராஸ் கட்சி காரங்களுக்கு ஆப்பு டோய். சாவட்டும் ஊழல்வாதிகள்


SUBRAMANIAN P
ஜூன் 04, 2025 14:23

இன்னிக்கி பெரும்பாலான இடங்களில் கிராமங்கள் உட்பட டிஜிட்டல் PAYMENT தான் நடக்குது. ஒன்றிரண்டு இடங்களை தவிர. அதனால் 100, 200 க்கு ஆபத்து வராது. லஞ்சம்,ஊழல் செய்து கொளுத்துப்போய் இருக்கும் அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு இனிமேல் எந்த நேரத்திலும் ரைடு வரலாம். கடந்த 30 ஆண்டுகால அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் வருமானங்கள், சொத்துக்கள் விபரங்கள் தோண்டி எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. லஞ்ச,ஊழல் வாதிகள் உஷார்.


A.Gomathinayagam
ஜூன் 04, 2025 14:16

ஏடீஎம்ல் குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை வைக்கும் நிலையில் .சிறிது நேரத்திலே பணம் முற்றிலும் எடுக்க பட்டு பண பற்றாக்குறை ஏற்படும் .ஆகவே இதை தவிர்க்கவேண்டுமானால் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து வரை பண தாள்கள் நிரப்ப வேண்டிய நிலை ஏற்படும்


Raja k
ஜூன் 04, 2025 12:54

1 ரூபாய், 2 ரூபாய் நாணயம் மட்டு வச்சா போதும், பண நோட்டுகள் அனைத்தையும் ஒழிச்சிருங்க, கருப்பு பணம் ஒழிஞ்சிரும், பாகிஸ்தான் தீவிரவாதிக ஒழிஞ்சிருவாங்க, 1000 ரூபாய் ஒழித்து பல லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்ட பாஜ அரசாங்கம் வாழ்க, 2000 ரூபாய் நோட்டு அடிச்சு பின் அதையும் ஒழிச்சு நாட்டின் பணமதிப்பை உயர்த்தி நம் ரூபாய் மதிப்பை விட அமெரிக்கா டாலரின் மதிப்பு குறைந்து போக காரனமாக இருந்த மோடி வாழ்க,,


தமிழன்
ஜூன் 04, 2025 13:05

நீங்க ஆன்டி இண்டியன்


SUBRAMANIAN P
ஜூன் 04, 2025 14:06

அகில உலக பெரும் பொருளாதார நிபுணர் RAJA K வாழ்க வாழ்க.


Ramesh Sargam
ஜூன் 04, 2025 12:31

Rs.10, Rs.20 மற்றும் Rs.50 வைத்தாலும் மிக மிக புண்ணியமாப்போகும். பார்த்து ஏதாவது செய்யுங்க. நன்றி. என்னைப்போன்ற ஏழைகளுக்கு அதுதான் உதவியாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை