பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக நம் நாடு மாறியுள்ளது. ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல், 12 ஆண்டுகளாக தேசத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பிரதமர் அயராது உழைத்து வருகிறார். அவரது தலைமையில் நாடு மேலும் வளர்ச்சி அடையும். - அமித் ஷா, மத்திய அமைச்சர், பா.ஜ.,கடும் நடவடிக்கை!
வரும் 21ல் நடக்கும், 'நீட்' மறுதேர்வை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இந்த வழக்கை விரைந்து முடிக்கவும் சி.பி.ஐ.,க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. - தர்மேந்திர பிரதான், மத்திய அமைச்சர், பா.ஜ.,மலிவான அரசியல்!
அரசியல் பழிவாங்கும் நோக்கில், என் தாயும், முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி வசித்து வந்த அரசு பங்களாவை, ஆளும் பா.ஜ., அரசு வேண்டுமென்றே வேறொருவருக்கு ஒதுக்கி உள்ளது. அவருக்கான பாதுகாப்பையும் குறைத்துள்ளது. இது, முதல்வர் சாம்ராட் சவுத்ரியின் மலிவான அரசியலை காட்டுகிறது. - தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி